வாழ்வாதாரத்திற்கு போராட்டம் : மயான பணி செய்யும் பட்டதாரி இளைஞர்!
Jan 14, 2026, 04:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வாழ்வாதாரத்திற்கு போராட்டம் : மயான பணி செய்யும் பட்டதாரி இளைஞர்!

Murugesan M by Murugesan M
Dec 15, 2025, 07:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கையில் சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து சமூக நல்லினக்கத்துடன் மயானங்களில் பணியாற்றி வரும் பட்டதாரி இளைஞர், தனது வாழ்க்கை தரத்தை உயர்த்த மயான பணியை அரசு நிரந்தர பணியாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்…

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகுமார். பி.ஏ பட்டதாரியான இவர், சிவகங்கையில் உள்ள மன்னர் துரை சிங்கம் அரசு கலைக்கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். சசிகுமாரின் தந்தை மயான பணிகளை மேற்கொண்டு வந்ததால், சுற்றுவட்டார பகுதிகளில் அவருக்கு வேலை வழங்க யாரும் முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தனது வருங்காலமும், குடும்பத்தின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாவதை உணர்ந்த சசிகுமார், தனது தந்தை செய்து வந்த மயான பணிகளையே கையிலெடுத்து மேற்கொள்ள முடிவு செய்தார்.

ஆனால் நாளடைவில் அந்த மயான பணிகள் மூலம் கிடைத்த வருமானம் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு போதுமானதாக இல்லை என்பதை உணர்ந்த சசிகுமார், தானொரு இந்துவாக இருப்பினும் மத நல்லிணக்கத்துடன் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சமுதாய மக்களின் மயானங்களிலும் பணியாற்றத் தொடங்கினார்.

இயற்கை எய்தியவர்களுக்கு மயானத்தில் குழி தோண்டுவது, உடல்களை எரியூட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறும் சசிகுமார், அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்தே தனது குடும்பத்தைக் காப்பாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார். சாதி, மத பேதமின்றி சசிகுமார் மேற்கொண்டு வரும் இந்த மயான பணியை, அவரது குடும்பத்தினர் புனிதமான பணியாகவே கருதுகின்றனர்.

இருப்பினும் போதுமான வருமானம் இல்லாத காரணத்தால் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் தவிப்பதாக கூறும் அவர்கள், மயான பணியில் ஈடுபடுவதால் சமுதாயத்தில் தங்களுக்கென்று எந்தவொரு மதிப்பும் இல்லாமல் இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்தச் சூழலில், தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், சமுதாயத்தில் மயான பணிக்கான மதிப்பை அதிகரிக்கவும், இந்தப் பணியை அரசு நிரந்தர பணியாக மாற்ற வேண்டும் எனச் சசிகுமார் மற்றும் குடும்பத்தார் கோரிக்கை முன்வைத்துள்ளனர். இந்நிலையில், தமிழக அரசு இவர்களின் கோரிக்கையைக் கருத்தில்கொண்டு, சமூகத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: newsspecial storyStruggle for livelihood: A young graduate working as a cemetery worker
ShareTweetSendShare
Previous Post

90-ஸ் கிட்ஸ்களின் நாயகன் ஜான் சீனா ஓய்வு – உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏமாற்றம்!

Next Post

விவசாயிகளை நம்பவைத்து ஏமாற்றுவது தான் நாடு போற்றும் நல்லாட்சியின் லட்சணமா ஸ்டாலின்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies