அரசு முறை பயணமாக ஜோர்டன் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
4 நாட்கள் அரசு முறை பயணமாக ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். சுற்றுப் பயணத்தின் முதல் நாடாக பிரதமர் மோடி ஜோர்டான் சென்றடைந்தார். அவருக்கு அம்மான் விமான நிலையத்தில் ராணுவ அணிவகுப்புடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து விமான நிலையத்திலிருந்து தங்கும் விடுதிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். பின்னர் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளையும் அவர் கண்டு ரசித்தார்.
இதையடுத்து அம்மானில் உள்ள ஹுசைனியா அரண்மனைக்கு சென்ற பிரதமர் மோடியை, ஜோர்டன் மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைன் வரவேற்றார். தொடர்ந்து இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
















