முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு விதிக்கப்பட்ட 27 ஆண்டு சிறை தண்டனையை குறைக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேசிலில் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
பிரேசிலில் கடந்த 2022ம் ஆண்டு நடந்த தேர்தலில், அப்போதைய அதிபராக இருந்த போல்சனாரோ தோல்வியடைந்தார். தேர்தலில் நடந்த முறைகேடு தான் தன்னுடைய தோல்விக்குக் காரணம் எனக் குற்றம்சாட்டிய போல்சனாரோ, புதிய அரசு அமைவதை தடுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்தல், ஆட்சியை கவிழ்க்க முயன்றது போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து, வீட்டுக் காவலில் அடைத்து வைக்கப்பட்ட போல்சனாரோ, அர்ஜென்டினாவுக்கு தப்பியோட முயற்சித்தார்.
ஆனால் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை காலத்தைக் குறைக்கும் மசோதா பிரேசில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.
கீழ் சபையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, மேல்சபையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியதால் தலைநகர் பிரேசிலியா முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
















