ஆஸ்திரேலியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் : குற்றவாளிகள் குறித்து வெளியான புதிய தகவலால் அதிர்ச்சி...!
Jan 14, 2026, 04:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஆஸ்திரேலியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் : குற்றவாளிகள் குறித்து வெளியான புதிய தகவலால் அதிர்ச்சி…!

Murugesan M by Murugesan M
Dec 17, 2025, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காணலாம்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல், அந்த நாட்டு மக்களை அதிர்ச்சியில் உறையவைத்தது. கடந்த 14-ம் தேதி ‘ஹனுக்கா விழா’ நடந்துகொண்டிருந்தபோது அங்கு வந்த சஜித் அக்ரம் மற்றும் அவரது மகனான நவீத் அக்ரம் ஆகியோர், அங்கிருந்த பொதுமக்கள் மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒரு சிறுமி உட்பட 16 பேர்ப் பரிதாபமாக உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர்ப் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தின்போது போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சஜித் அக்ரம் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், குண்டு பாய்ந்த காயங்களுடன் கைது செய்யப்பட்ட நவீத் அக்ரமுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தாக்குதலை பயங்கரவாத செயல் என ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ள நிலையில், குற்றவாளிகளுக்குத் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், போண்டி கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. குறிப்பாக இந்தத் தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சஜித் அக்ரம், இந்தியாவின் தெலங்கானா மாநிலத்திலுள்ள ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தெலங்கானா மாநில போலீசாரும் உறுதி படுத்தியுள்ளனர். ஹைதராபாத்தில் வணிகவியல் பட்டம் முடித்த சஜித் அக்ரம், 1998-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்துள்ளார்.

இந்தியாவில் இருந்தவரை அவர் மீது எந்தவிதக் குற்றப்பின்னணியும் இல்லை எனவும், கடந்த ஆண்டுகளில் குடும்பத்தினருடன் மிகக் குறைந்த தொடர்பே அவர் மேற்கொண்டிருந்ததாகவும் போலீசார்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா சென்ற பிறகு அவர் இந்தியாவிற்கு வெறும் 6 முறை மட்டுமே வந்துள்ளதாகத் தெரிவித்துள்ள போலீசார், அதுவும் சொத்துக்கள் தொடர்பான விவகாரங்கள் மற்றும் வயதான பெற்றோரைச் சந்திப்பதற்காக மட்டுமே என்பதையும் விளக்கியுள்ளனர். மேலும், அவரது பயங்கரவாத சிந்தனைகளில் இந்தியாவுக்கோ அல்லது தெலங்கானாவுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் போலீசார்த் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதற்கிடையே, சஜித் மற்றும் நவீத் அக்ரம் சமீபத்தில் பிலிப்பைன்ஸ் சென்றிருந்த நிலையில், அங்கு அவர்களுக்குப் பயங்கரவாத பயிற்சிகள் அளிக்கப்பட்டதா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதைச் செலுத்தும் வகையில், ஆஸ்திரேலியா முழுவதும் தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மிகக் கடுமையான துப்பாக்கி சட்டங்கள் உள்ள ஆஸ்திரேலியாவில் இத்தகைய தாக்குதல் நடந்துள்ளது, அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் துப்பாக்கி கட்டுப்பாடு குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.

Tags: newsAustraliaTodaygun shotTerrorist attack in Australia: Shocking new information about the perpetrators
ShareTweetSendShare
Previous Post

உலகளாவிய பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான் – ஐநாவில் தோலுரித்த இந்தியா!

Next Post

பிரதமர் மோடியை காரில் அழைத்து சென்ற பட்டத்து இளவரசர் : ஜோர்டான் பயணத்தில் கவனம் பெற்ற சுவாரஸ்ய நிகழ்வு…!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies