பிரதமர் மோடியை காரில் அழைத்து சென்ற பட்டத்து இளவரசர் : ஜோர்டான் பயணத்தில் கவனம் பெற்ற சுவாரஸ்ய நிகழ்வு...!
Jan 14, 2026, 03:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரதமர் மோடியை காரில் அழைத்து சென்ற பட்டத்து இளவரசர் : ஜோர்டான் பயணத்தில் கவனம் பெற்ற சுவாரஸ்ய நிகழ்வு…!

Murugesan M by Murugesan M
Dec 17, 2025, 09:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜோர்டான் பயணத்தின்போது அந்நாட்டு இளவரசர் 2-ம் அப்துல்லா, பிரதமர் மோடிக்காகக் கார் ஓட்டி சென்றது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், ஜோர்டான் இளவரசர் குறித்த செய்தி தொகுப்பு ஒன்றைத் தற்போது காணலாம்.

இந்தியா – ஜோர்டான் இடையேயான தூதரக உறவுகளின் 75 ஆண்டுகளை நினைவுகூறும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். தலைநகர் அம்மான் சென்றடைந்த அவருக்கு ஜோர்டான் பிரதமர் ஜாஃபர் ஹசன் மூலம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவரை வரவேற்ற ஜோர்டான் பட்டத்து இளவரசரான இரண்டாம் அப்துல்லா, பிரதமர் மோடியைத் தனது காரில் அமரவைத்து அங்குள்ள அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் சென்றார்.

பட்டத்து இளவரசரான ஹுசைன் பின் அப்துல்லா அல்-ஹாஷிமி, கடந்த 1994-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி ஜோர்டான் தலைநகர் அம்மானில் பிறந்தார். 1921-ம் ஆண்டு முதல் ஜோர்டானை ஆட்சி செய்து வரும் ஹாஷிமைட் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், ஜோர்டான் மன்னரான 2-ம் அப்துல்லாவுக்கும், ராணி ரானியாவிற்கும் பிறந்த மூத்த மகனாவார். இவருக்கு 3 உடன்பிறப்புகள் உள்ளனர்.

ஜோர்டானில் தனது கல்வியைத் தொடங்கிய பட்டத்து இளவரசர் ஹுசைன், 2012-ம் ஆண்டு கிங்ஸ் அகாடமியில் தனது பள்ளி படிப்பை முடித்தார். பின்னர் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற அவர், 2016-ம் ஆண்டு ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச வலராற்றில் பட்டம் பெற்றார். தொடர்ந்து 2017-ம் ஆண்டு பிரிட்டன் சென்ற அவர், சாண்ட்ஹர்ஸ்டில் உள்ள ராயல் அகாடமியில் ராணுவ பயிற்சியையும் முடித்தார். இந்நிலையில், அவர் தற்போது ஜோர்டானிய ஆயுதப்படைகளில் மேஜராகப் பணியாற்றி வருகிறார். 2023-ம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி, இளவரசி ராஜ்வா அல்-சயீஃபைத் திருமணம் செய்துகொண்டார்.

2009-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி வெளியான அரசாணையின் மூலம், ஹுசைன் பின் அப்துல்லா அல்-ஹாஷிமி, ஜோர்டானின் பட்டத்து இளவரசராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் அரசப் பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார். பட்டத்து இளவரசர் என்ற அடிப்படையில் மன்னர் 2-ம் அப்துல்லாவுடன் இணைந்து பல அரசு பயணங்களையும், ஏராளமான ராணுவ பணிகளையும் மேற்கொண்டுள்ள ஹுசைன், ஐநா பொதுச்சபை, ஐநா பாதுகாப்பு கவுன்சில், ஐநா காலநிலை மாநாடு, உலகப் பொருளாதார மன்றம் போன்ற முக்கிய சர்வதேச மேடைகளில் ஜோர்டானைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

இதுமட்டுமின்றிக் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரலில், தனது 20-வது வயதில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் அமர்வைத் தலைமையேற்ற உலகின் இளைய நபர் என்ற பெருமையையும் அவர்  பெற்றார். இந்நிலையில், தற்போது கிரௌன் பிரின்ஸ் ஃபவுண்டேஷன் அமைப்பின் தலைவராக உள்ள ஹுசைன், தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி, அறிவியல், மனிதாபிமானம் மற்றும் இளைஞர் நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

அவரது முயற்சியின் பலனாகக் கடந்த 2018-ம் ஆண்டு ஜோர்டானின் முதல் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இந்தச் சூழலில் ஜோர்டான் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை, பட்டத்து இளவரசர் ஹுசைன் வரவேற்று உபசரித்துள்ளார். அது தொடர்பான புகைப்படங்களைப் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள நிலையில், இந்த நிகழ்வு இந்தியா மீது ஜோர்டான் மக்கள் வைத்துள்ள மரியாதையைப் பிரதிபலிக்கிறது எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags: PM ModiThe Crown Prince who took Prime Minister Modi in a car: An interesting incident that attracted attention during the Jordan tripபிரதமர் மோடியை காரில் அழைத்து சென்ற பட்டத்து இளவரசர்
ShareTweetSendShare
Previous Post

ஆஸ்திரேலியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் : குற்றவாளிகள் குறித்து வெளியான புதிய தகவலால் அதிர்ச்சி…!

Next Post

பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தான் நடத்திய பயங்கரவாத சதி : NIA குற்றப்பத்திரிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள் என்ன?

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies