வெனிசுலாவை சுற்றிவளைக்கும் அமெரிக்கா : மதுரோ அரசுக்கு எதிராக தீவிரமடையும் அழுத்தங்கள்...!
Mar 15, 2026, 01:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

வெனிசுலாவை சுற்றிவளைக்கும் அமெரிக்கா : மதுரோ அரசுக்கு எதிராக தீவிரமடையும் அழுத்தங்கள்…!

Murugesan M by Murugesan M
Dec 18, 2025, 03:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ தலைமையிலான அரசை வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்பாக அறிவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. வெனிசுலா அரசுக்கு எதிராக இத்தனைக் கடுமையான நடவடிக்கையை அமெரிக்கா எடுக்கக் காரணம் என்ன? பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.

அமெரிக்கா – வெனிசுலா இடையேயான பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெனிசுலாவில் நிக்கோலஸ் மதூரோ தலைமையிலான அரசு ஜனநாயக நடைமுறைகளைப் பின்பற்றவில்லை எனவும், அங்கு தேர்தல் முறைகேடுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டி வருவதே இந்தப் பிரச்னைக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

அதேபோல, உலகின் பெரிய எண்ணெய் வளங்களைக் கொண்டுள்ள வெனிசுலாவின் எண்ணெய் வருவாய், மதூரோவின் ஆட்சியைத் தொடரப் பயன்படுத்தப்படுவதாக கூறும் அதிபர் டிரம்ப், பெரும்பாலும் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் அந்த வருவாய் பிராந்திய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக மாறி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அதனடிப்படையில் வெனிசுலாவுக்கு எதிராகப் பல்வேறு பொருளாதாரத் தடைகளையும், அரசியல் அழுத்தங்களையும் அமெரிக்கா அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், அமெரிக்காவின் இந்தச் செயலை கடுமையாக எதிர்த்து வரும் வெனிசுலா அரசு, உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதையும், பொருளாதாரத் தாக்குதல்கள் மேற்கொள்வதையும் அமெரிக்கா கைவிட வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

இந்தச் சூழ்நிலையில், வெனிசுலா அரசுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் மேலும் கடுமையான நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். குறிப்பாக மதுரோ தலைமையிலான வெனிசுலா அரசை வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்பாக அறிவிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருவதாகவும், வெனிசுலாவின் அனைத்து எண்ணெய் டாங்கர்களையும் முழுமையாகத் தடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ள அதிபர் டிரம்ப், வெனிசுலாவில் இருந்து எண்ணெய் கடத்தலை முற்றிலும் நிறுத்த அமெரிக்கக் கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறியுள்ளார். அத்துடன், அமெரிக்கச் சொத்துக்களை திருடியதுடன், தீவிரவாதம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் மனிதக் கடத்தல் போன்ற குற்றங்களில் மதுரோ அரசு ஈடுபட்டுள்ளதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிபர் டிரம்பின் உத்தரவால் வரலாறு காணாத மிகப்பெரிய அமெரிக்கக் கடற்படை அணி வெனிசுலாவை முழுமையாகச் சுற்றிவளைத்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவிடம் இருந்து திருடிய எண்ணெய், நிலம் மற்றும் பிற சொத்துக்களை வெனிசுலா அரசு திருப்பி ஒப்படைக்கும் வரை இந்த அழுத்தம் தொடரும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியாகும் முன்னரே வெனிசுலா கடற்கரை அருகே ஒரு எண்ணெய் டாங்கரை அமெரிக்கப் படைகள் கைப்பற்றிப் பறிமுதல் செய்தன. அதில் வெனிசுலா மற்றும் ஈரானிலிருந்து வந்த தடைச் செய்யப்பட்ட எண்ணெய் கொண்டு செல்லப்பட்டதாக அமெரிக்க நிர்வாகம் தரப்பில் தெரிவித்தது.

அதன் காரணமாகப் பறிமுதல் செய்யப்பட்ட எண்ணெயை, அமெரிக்கா தக்கவைத்துக்கொள்ளும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சமீப காலமாக மதுரோவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வெனிசுலா நிறுவனங்கள் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், கரீபியன் பகுதியில் அமெரிக்காவின் ராணுவ இருப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலான USS ஜெரால்ட் ஆர். ஃபோர்டும் கரீபியன் கடற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்கப் பி-1 லாஞ்சர்க் குண்டுவீச்சு விமானங்களும் வெனிசுலா கடற்கரை அருகே பறந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுரோ அரசு மேற்கொண்டு வரும் போதைப்பொருள் மற்றும் எண்ணெய் கடத்தலைத் தடுப்பதே இந்த நடவடிக்கைகளின் நோக்கம் என அமெரிக்க அதிகாரிகள் கூறி வந்தாலும், கரீபியன் கடற்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் உயிரிழந்திருப்பது அமெரிக்கச் செனட் சபையின் கவனத்தைப் பெற்றுள்ளது. மொத்தத்தில், அமெரிக்கா – வெனிசுலா இடையேயான மோதல் தற்போது அரசியல் மற்றும் பொருளாதார அளவிலிருந்து ராணுவ அழுத்த நிலைக்கு நகர்ந்துள்ளது. மதூரோ அரசு சரணடையாத வரைத் தடைகள் மற்றும் அழுத்தங்கள் தொடரும் என அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ள நிலையில், இந்தப் பதற்றம் மேலும் தீவிரமடைய வாய்ப்பு இருப்பதாகவே சர்வதேச அரசியல் வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.

Tags: usaDonald TrumpAdding new features! : Vande Bharat sleeper train service starts delayed!America surrounds Venezuela: Pressures intensify against the Maduro governmentவெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ
ShareTweetSendShare
Previous Post

ராமநாதபுரம் : தீவுப்போல் மாறிய பிரப்பன் வலசை கிராமம் – கண்டுகொள்ளாத நிர்வாகம்!

Next Post

முடங்கிக் போன ஸ்மார்ட் பைக் திட்டம் : சென்னை மாநகராட்சியின் அலட்சியம்தான் காரணமா?

Related News

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தையில் விடுவிக்க டிரம்ப் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies