ஓமன் தலைநகர் மஸ்கட்டில் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஜோர்டான், எத்தியோப்பியா உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தின் இறுதிக்கட்டமாக, பிரதமர் மோடி ஓமன் தலைநகர் மஸ்கட் சென்றடைந்தார். மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடியை, ஓமன் நாட்டின் துணைப் பிரதமர் சையத் ஷிஹாப் பின் தாரிக் அல் சையத் நேரில் வரவேற்றார். அங்கு பிரதமர் மோடிக்கு சிறப்பான ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஓமன் நாட்டின் துணைப் பிரதமர் சையத் ஷிஹாப் பின் தாரிக் அல் சையத்தை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர், பிரதமர் மோடி தங்கும் நட்சத்திர விடுதியில் அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பாடல் மற்றும் நடன நிகழ்ச்சியை பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தார். பின்னர் அவர்களுடன் பிரதமர் மோடி உரையாடினார்.
















