இஸ்லாமியர்கள் சூர்ய நமஸ்காரம் செய்ய வேண்டும் என ஆர்எஸ்எஸ் பொது செயலர் தத்தாத்ரேய ஹோசபலே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள சந்த் கபீரில் இந்து சம்மேளனம் நடைபெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலர் தத்தாத்ரேய ஹோசபலே பங்கேற்று பேசினார்.
அப்போது ஒவ்வொருவரின் மதங்களையும், கலாசாரங்களையும் மதிக்கும் இந்தியா, கலாசாரம் மற்றும் அறிவில் உலகளாவிய தலைமையாக மாற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் சுற்றுச்சூழல் காரணங்களுக்காக ஆறுகளையும் சூரியனையும் வணங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நமது இஸ்லாமிய சகோதரர்கள் சூரிய நமஸ்காரம் செய்தால், அவர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார். சூரிய நமஸ்காரம் ஒரு விஞ்ஞானப்பூர்வமான மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பயிற்சி என்றும், அது யாருக்கும் தீங்கு விளைவிக்காது என்றும் ஹோசபலே மேலும் கூறினார்.
நமது இந்து மதம் உன்னதமானது. அது அனைவருக்கும் பொதுவானது என்றும் ஹோசபலே தெரிவித்தார்.
















