எஸ்ஐஆர் பணிக்கு பிறகு, தமிழகத்தில் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், அதுகுறித்த விவரங்களை பார்க்கலாம்.
அதன்படி, கோவை மாவட்டத்தில் 6 லட்சத்து 50 ஆயிரத்து 590 பேரும், காஞ்சிபுரத்தில்
2 லட்சத்து 74 ஆயிரத்து 274 வாக்காளர்களும், திருவள்ளூரில் 6 லட்சத்து 19 ஆயிரத்து 777 வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 லட்சத்து ஆயிரத்து 871 வாக்காளர்களும், தஞ்சாவூரில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 593 வாக்காளர்களும், நெல்லையில் 2 லட்சத்து 16 ஆயிரம் 966 வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், திருச்சி மாவட்டத்தில் 3 லட்சத்து 31ஆயிரத்து 787 வாக்காளர்களும், கரூரில் 79 ஆயிரத்து 690 வாக்காளர்களும், நாமக்கல்லில் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 706 வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 902 வாக்காளர்களும், தேனி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 739 வாக்காளர்களும், விழுப்புரத்தில் ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 865 வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 368 வாக்காளர்களும், ஈரோட்டில் 3 லட்சத்து 25 ஆயிரத்து 429 வாக்காளர்களும், திருப்பூரில் 5 லட்சத்து 63 ஆயிரத்து 785 வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 373 வாக்காளர்களும், சிவகங்கையில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 828 வாக்காளர்களும், விருதுநகரில் ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 964 வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 49 ஆயிரத்து 548 வாக்காளர்களும், தூத்துக்குடியில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 527 வாக்காளர்களும், கடலூரில் 2 லட்சத்து 46 ஆயிரத்து 818 வாக்கார்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டத்தில் 57 ஆயிரத்து 338 வாக்காளர்களும், மதுரையில் 3 லட்சத்து 80 ஆயிரத்து 474 வாக்காளர்களும், தருமபுரியில் 81 ஆயிரத்து 515 வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 364 வாக்காளர்களும், திண்டுக்கல்லில் 3 லட்சத்து 24 ஆயிரத்து 894 வாக்காளர்களும், கிருஷ்ணகிரியில் ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 549 வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 480 வாக்காளர்களும், சேலத்தில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 429 வாக்காளர்களும், திருப்பத்தூரில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 739 வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் 56 ஆயிரத்து 91 வாக்காளர்களும், திருவண்ணாமலையில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 162 வாக்காளர்களும், மயிலாடுதுறையில் 75 ஆயிரத்து 378 வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டையில் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 157 வாக்காளர்களும், புதுக்கோட்டையில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 587 வாக்காளர்களும், வேலூரில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 25 வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
















