செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே அரசு பேருந்தில் பரிசோதனையாளர் வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் இருந்து சென்னை செல்லும் அரசு விரைவு பேருந்தில் டிக்கெட் பரிசோதகர் விஜயன், பயணிகளிடம் பயணச்சீட்டு பரிசோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே பேருந்து வந்தபோது விஜயனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக, அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விஜயன் உயிரிழந்துவிட்டதாகக் கூறினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















