திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே போலி ஆவணங்களை பயன்படுத்தி விவசாயிகளின் நிலத்தை அமைச்சரின் பினாமிகள் அபகரிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒட்டன்சத்திரம் அடுத்த நாகனம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நல்லசாமி. இவர் ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள நிலத்தை ஏலத்தில் எடுத்து, ஆண்டாண்டு காலமாக விவசாயம் பார்த்து வந்துள்ளனர்.
தற்போது நல்லசாமியின் மகன்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர், அப்பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், சம்மந்தப்பட்ட நிலத்தை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியின் பினாமிகள் அபகரிக்க முயல்வதாக நல்லசாமியின் மகன்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கபிலன், நாட்ராயன் ஆகியோர் போலி ஆவணங்களை பயன்படுத்தி நிலங்களை அபகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
















