உலகில் 29 நாடுகளுக்கான தூதர்களை திரும்ப பெறுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் 2-வது முறையாக பதவியேற்றதில் இருந்து, அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையுடன் தன் நிர்வாகத்தைச் செயல்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் தன் கொள்கைக்கு இணங்கக்கூடிய துாதர்களை நியமிக்கும் வகையில், 29 நாடுகளைச் சேர்ந்த தூதர்களைத் திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி ஆப்ரிக்காவில் 13 பேரும், ஆசியாவில் 10 பேரும், ஐரோப்பாவில் 4 பேரும் என மொத்தம் 29 துாதர்கள் திரும்பப் பெறப்படுகின்றனர்.
முந்தைய அதிபர் ஜோ பைடன் ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட இந்த 29 துாதர்களுக்கும், வருகிற ஜனவரி மாதத்துக்குள் பதவியில் இருந்து விலக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
















