ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் இருந்து கோவைக்கு செல்லும் இன்டர்சிட்டி ரயிலில், ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் சேக் முகமது என்பவர் பயணம் மேற்கொண்டார். அதே ரயிலில், சென்னையில் சட்டக்கல்லூரியில் பயிலும் மாணவியும் கோவைக்கு பயணம் செய்துள்ளார். ரயில் காட்பாடி அருகே சென்றபோது மாணவியின் அருகே அமர்ந்திருந்த காவலர் சேக் முகமது, அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி, தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக ரயில்வே போலீசாருக்கு மாணவி அளித்த தகவலின்பேரில், அரக்கோணம் ரயில் நிலையம் வந்தபோது சேக் முகமதுவை ரயிலில் இருந்து இறக்கிவிட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், காவலர் சேக் முகமது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
















