மதுரையில் தவெக மாவட்ட செயலாளர் குறித்து அவதூறு பரப்பிய பெண் மீது புகாரளிக்க காவல் ஆணையர் அலுவலகத்தில் அக்கட்சியின் மகளிரணியினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காலாங்கரை பகுதியைச் சேர்ந்த சத்யா என்பவர், தவெக மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் விஜயன்பன் கல்லணை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விஜயன்பன் கல்லாணை மீது வேண்டுமென்றே அவதூறு பரப்பி வருவதாகவும், குற்றஞ்சாட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் 300க்கும் மேற்பட்ட தவெக மகளிர் அணியினர் மதுரை மாநகர காவல் ஆணையர் புகார் அளிக்க குவிந்தனர்.
அப்போது, 20க்கும் மேற்பட்ட காவல் துறையினர் தவெக பெண் நிர்வாகிகளை தடுத்து நிறுத்தினர். பின்னர், பெண் நிர்வாகிகள் சிலர் மட்டும் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தவெக பெண் நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் விஜயன்பன் கல்லாணை மீது குற்றம் சாட்டிய, சத்யா மீது பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளதாகவும், அவருக்கு பதவி வழங்காததால் வேண்டுமென்றே அவதூறு பரப்பி வருவதாகவும் குற்றஞ்சாட்டினர்.
















