கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் ஒருவர் மருத்துவமனையின் அலட்சியத்தால், 8 மணி நேர காத்திருப்புக்கு பின்னர் மரணமடைந்த சோகமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் 22ம் தேதி அலுவலகத்தில் இருந்த 44 வயதான பிரசாந்த் ஸ்ரீகுமாருக்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்படவே, Edmonton’s Grey Nuns Hospital-க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
வலி தாங்க முடியவில்லை என்று கதறிய அவருக்கு ECG எடுத்த மருத்துவமனை ஊழியர்கள, சிறிது டைலெனால் மட்டும் கொடுத்துள்ளனர்.
மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான பிரசாந்த் ஸ்ரீகுமாருக்கு, நெஞ்சு வலியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் துடித்துக்கொண்டிருந்தார்.
தனது தந்தையிடம் அப்பா எனது வலி கூடிக்கொண்டே போகிறது குறையவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
8 மணிநேர காத்திருப்புக்கு பின்னர் மருத்துவமனை ஊழியர்கள், அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைக்க, பிரசாந்த் ஸ்ரீகுமார் இறந்து 10 வினாடிகள் கடந்திருந்தது.
இறப்பதற்கு முன்னர் எழுந்து நின்று தன்னை பார்த்ததாகவும், அப்படியே சரிந்து விழுந்துவிட்டதாகவும் கண்ணீர் மல்கக் கூறுகிறார் அவரது தந்தை.
மருத்துவமனையின் அலட்சியத்தால், ஒருவரின் உயிர் போனது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
















