ஆயுத ஏற்றுமதி ரூ.30000 கோடியாக உயருகிறது : சர்வதேச அளவில் 3வது ராணுவ சக்தியாக மாறிய இந்தியா!
Jan 13, 2026, 10:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆயுத ஏற்றுமதி ரூ.30000 கோடியாக உயருகிறது : சர்வதேச அளவில் 3வது ராணுவ சக்தியாக மாறிய இந்தியா!

Murugesan M by Murugesan M
Dec 26, 2025, 08:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி அளவுக்கு ஆயுத ஏற்றுமதி செய்யும் இந்தியா, மூன்றாவது பெரிய ராணுவ சக்தியாக உருவெடுத்து வருகிறது. ஆயுத ஏற்றுமதியை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கையில் மும்முரம் காட்டி வருகிறது. இதுகுறித்து ஒரு செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

பாகிஸ்தான் தீவிரவாதிகளை சல்லடை போட்டு சலித்து எடுத்த இந்தியாவின் உறுதிப்பாடும், சீனா, துருக்கி, பாகிஸ்தான் ஆயுதங்களை தவிடுபொடியாக்கிய ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கையும் பாரதத்தை உலகம் உயர்த்திப் பிடிக்கக் காரணமாகியுள்ளது.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியா உள்நாட்டு ஆயுத அமைப்புகளை பயன்படுத்தியதோடு, ட்ரோன் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் சாதித்தது.

இதன் காரணமாக இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் சர்வதேச நாடுகளின் விருப்பத்தேர்வாக மாறியுள்ளன. பாரதத்தில் உற்பத்தி செய்யப்படும் வெடிமருந்துகள், ஆயுதங்கள், பாதுகாப்பு உபகரணங்கள், 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்தியாவின் கொள்கைகளும், மேக் இன் இந்தியா முயற்சியும், உலகப் பாதுகாப்புச் சந்தையில் இந்தியாவை வளர்ந்து வரும் சக்தியாக நிலைநிறுத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி ஒரு லட்சத்து 54 ஆயிரம் கோடியை எட்டியது. ஏற்றுமதி கிட்டத்தட்ட 12 சதவிகிதமாக அதிகரித்து 24 ஆயிரம் கோடியாக உயர்ந்தது.

65 சதவிகிதத்திற்கும் அதிகமான பாதுகாப்பு உபகரணங்கள் இப்போது உள்நாட்டில் தயாரிக்கப்படுவதால், நாடு, இறக்குமதி சார்புநிலையை பெருமளவில் குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்தி, போட்டித்தன்மையை மேம்படுத்தியுள்ளது. 2013-14ம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 686 கோடியாக இருந்த நிலையில், தற்போது 35 மடங்கு அதிகரித்து 30 ஆயிரம் கோடியை தொட்டுள்ளது.

பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க, நாடு முழுவதும் பிரத்யேக உள்கட்டமைப்பை இந்தியா உருவாக்கி வருகிறது. உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் 91 ஆயிரத்து 450 கோடிக்கும் அதிகமான முதலீடுகளுடன் கூடிய பாதுகாப்பு தொழில்துறை தாழ்வாரங்கள், 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைகளை உருவாக்கும் மற்றும் தனியார் முதலீடுகளை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆபரேஷன் சிந்தூர் மற்றும் உலகளாவிய ராணுவ போக்கு, எதிர்கால போரில் ட்ரோன்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் கண்காணிப்பு மற்றும் தன்னாட்சி அமைப்புகள், இந்தியா கவனம் செலுத்தும் பகுதிகளாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவீன கப்பல்கள் மற்றும் ஆயுத தளங்களுடன் இந்திய கடற்படை இந்தியப் பெருங்கடலில் தனது இருப்பை விரிவுபடுத்த உள்ள அதே நேரத்தில், நவீன விமானங்கள் மற்றும் மேம்பட்ட ஆயுத அமைப்புகள் அவசியமாக மாறியிருக்கிறது.

ரஷ்யாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானமான SU-57 அல்லது அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பு கொள்முதல் தொடர்பான ஒப்பந்தங்கள் சாத்தியமாகும் வாய்ப்பும் கனிந்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபபடியாகப் பெரும்பாலான நாடுகளை முந்தி 3வது பெரிய ராணுவ சக்தியாக உருவெடுத்துள்ள இந்தியா, 2029ம் ஆண்டுக்குள் ஆயுத ஏற்றுமதியை 50 ஆயிரம் கோடியாக உயர்த்துவதை இலக்காகக் கொண்டுள்ளது… எனவே 2026 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு பட்ஜெட் 20 முதல் 25 சதவிகித அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: indian armyArms exports rise to Rs. 30000 crore: India becomes the 3rd largest military power in the worldஆயுத ஏற்றுமதி
ShareTweetSendShare
Previous Post

இந்துக்கள் மீதான தாக்குதல் : தலைமறைவாக இருக்கும் திரையுலக போராளிகள்!

Next Post

17 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பிய தாரிக் ரஹ்மான் : இந்திய – வங்கதேச உறவில் என்ன மாற்றம் நிகழும்?

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies