இந்தியாவில் சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில், தனியார் வங்கிகள் தொடர்ந்து முன்னிலை வகிப்பதாக ஒரு அறிக்கைமூலம் தெரியவந்துள்ளது.
அந்த அறிக்கையின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறு தொழில் நிறுவனங்களுக்குப் பொதுத்துறை வங்கிகளின் பங்களிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது.
அதாவது, கடந்த 2023ல் 39 புள்ளி 3 சதவீதத்தில் இருந்த பொதுத்துறை வங்கிகளின் பங்கு, தற்போது 37 புள்ளி 80 சதவீதமாகக் குறைந்துள்ளது.
பொதுத்துறை வங்கிகள் இழந்த சந்தையை, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் கைப்பற்றி உள்ளன.
குறிப்பாக, தனிநபருக்குச் சொந்தமான நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவதில், நிதி நிறுவனங்களின் பங்கு தற்போது 41 சதவீதமாக உள்ளன.
















