ரூ.1800 கோடியில் பைபாஸ் சாலை விரிவாக்கம் : கோவை வளர்ச்சிக்காக மத்திய அரசின் மெகா திட்டம்!
Jan 14, 2026, 02:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரூ.1800 கோடியில் பைபாஸ் சாலை விரிவாக்கம் : கோவை வளர்ச்சிக்காக மத்திய அரசின் மெகா திட்டம்!

Murugesan M by Murugesan M
Dec 27, 2025, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை நீலாம்பூர்–மதுக்கரை பைபாஸ் சாலை, 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய ரூ.1,800 கோடி ரூபாயில் தேசிய நெடுஞ்சாலைதுறை திட்ட அறிக்கை தயாரித்துள்ளது. சாலை விரிவாக்கம் செய்யப்பட்டால் என்னென்ன பயன்கள் கோவை மாவட்டத்திற்கு கிடைக்கும் என்பதை இந்தச் செய்தி தொகுப்பில் காணலாம்.

தென்னிந்தியாவின் “மான்செஸ்டர்” என்று அழைக்கப்படும் கோவை மாநகரம், இந்தியாவின் மிக வேகமாக வளரும் நகரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. ஆயிரக்கணக்கான சிறு, குறு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐ.டி.நிறுவனங்கள் அதிகரித்து வருவதன் காரணமாகக் கோவையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, 26 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட நீலாம்பூர் – மதுக்கரை இடையே 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சந்திப்புச் சாலைகள் குறுக்கிடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனை தவிர்க்கும் வகையில், நீலாம்பூர் – மதுக்கரை இருவழி சாலையை, 6 வழிச்சாலையாக மாற்ற 1800 கோடி மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்ட அறிக்கை தயாரித்துள்ளது. இதற்குப் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்தத் திட்டத்தின் கீழ், தற்போதுள்ள 10.5 மீட்டர் அகல சாலை, எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு 45 மீட்டர் வரை அகலப்படுத்தப்படும். சாலையின் குறுக்கே உள்ள இருகூர் மற்றும் செட்டிபாளையம் கீழ்மட்ட ரயில்வே பாலங்கள் அகலப்படுத்தப்படும்.

சிந்தாமணிபுதூர் சந்திப்பு, பொள்ளாச்சி சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் மேம்பாலங்களும், 13 இடங்களில் கீழ்மட்ட சுரங்கப்பாதைகளும் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் எந்த குறுக்கீடும் இன்றி வாகனங்கள் வேகமாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்க முடியும்.

இதற்காக 49 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ள நிலையில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளார். 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக டெண்டர் அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாகக் கோவை வளர்ந்து வரும் நிலையில், மத்திய அரசின் இந்த வளர்ச்சி திட்டமானது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags: Bypass road expansion at a cost of Rs. 1800 crore: A mega project by the central government for Coimbatore's developmentமத்திய அரசின் மெகா திட்டம்கோவை வளர்ச்சி
ShareTweetSendShare
Previous Post

நோயாளிகளை வஞ்சிப்பதாக புகார் : சித்த மருத்துவமனையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு!

Next Post

பயங்கரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் : ஐ.எஸ். முகாம்கள் மீது அமெரிக்கா தாக்குதல் பின்னணி என்ன?

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies