ஜனவரி 31-ஆம் தேதிக்குள் அசையா சொத்து விவரங்களைச் சமா்ப்பிக்க ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட கால அவகாசத்தில் அசையா சொத்து விவரங்களை பதிவேற்றம் செய்யும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மட்டுமே ஊதிய உயா்வு வழங்கும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனால் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் அசையா சொத்து விவரங்களைச் சமா்ப்பிக்க வேண்டுமென ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் அறிக்கை தாக்கல் செய்யத் தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
















