அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி : கறிக்கோழி இறைச்சி இனி கனவில்தானா....?
Jul 28, 2026, 07:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி : கறிக்கோழி இறைச்சி இனி கனவில்தானா….?

Murugesan M by Murugesan M
Dec 27, 2025, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கறிக்கோழி பண்ணை விவசாயிகள் உற்பத்தி நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். இதனால் மக்களின் முக்கிய ப்ரோட்டின் உணவான கோழி இறைச்சி விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பைத் தற்போது பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் அசைவ உணவு பிரியர்களின் மிக முக்கிய உணவாகக் கோழி இறைச்சி உள்ளது.‌ தமிழ்நாட்டில் மட்டும் தினசரி மூன்று லட்சம் கிலோ கோழி இறைச்சி விற்பனை ஆகிறது. அதிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் நான்கு லட்சம் கிலோ கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு காலத்தில் கோழி இறைச்சியை பரவலாக உண்ணும் வழக்கம் இல்லாமல் இருந்த நிலையில், பண்ணை கறிக்கோழிகள் வரத் துவங்கிய பின்னர் சாதாரண பாமர மக்களும் எளிதில் அசைவ உணவு உண்ணும் நிலையை அடைந்தனர்.‌

விலை குறைவு, அதிக புரோட்டின் என எளிய மக்களின் விருப்ப உணவாகக் கோழி இறைச்சி உள்ளது. இந்நிலையில்தான் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் கோழி பண்ணைகள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள ஏராளமான விவசாயிகள் கறிக்கோழி பண்ணை அமைத்துக் கூலிக்கு கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பிராய்லர் நிறுவனங்களிடமிருந்து கோழிக்குஞ்சுகளைப் பெற்று 42 நாட்களுக்கு வளர்த்துக் கொடுக்கும் பணியைச் செய்து வருகின்றனர்.

இதில் ஒரு கிலோ பிராய்லர் கோழிக்கு 6 ரூபாய் 50 காசு மட்டுமே கூலியாக வழங்கப்படுகிறது. மின் கட்டணம் உயர்வு, கோழிக்குஞ்சுகள் வெப்பநிலையைச் சம நிலையில் வைத்திருக்கத் தேவையான அடுப்புக்கரி மூட்டைகள் என அனைத்தும் பல மடங்கு விலை உயர்ந்த நிலையில் ஆறு ரூபாய் 50 காசு மட்டுமே கூலி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகக் குமுறல் எழுந்துள்ளது.

கூலி உயர்த்தப்படாததோடு பல மடங்கு உயர்ந்துள்ள மூலப் பொருட்கள் விலையால் கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். பிராய்லர் கோழிகளுக்கு 20 ரூபாய், நாட்டுக்கோழி வளர்ப்புக்கு 25 ரூபாய் என கூலியை உயர்த்திக் கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள கறிக்கோழி பண்ணை விவசாயிகள் 1ம் தேதி முதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

புதிய கோழிக்குஞ்சுகள் பெறப்பட மாட்டாது எனவும் அறிவித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கறிக்கோழி வர்த்தகம் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் இன்றியமையாத அசைவ உணவை தங்கு தடையின்றி மக்களுக்கு வழங்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கால்நடை பராமரிப்பு துறை, கறிக்கோழி உற்பத்தியாளர்கள், பண்ணை விவசாயிகள் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து தீர்வு காண வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.

இல்லையேல் அறிவித்தபடி உற்பத்தி நிறுத்தப் போராட்டம் 1ம் தேதி தொடங்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: non vegNEWS TODAYtoday newsA shock for non-vegetarian lovers: Will chicken meat now only be a dream...?அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி
ShareTweetSendShare
Previous Post

சொத்து விவரங்கள் – ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கெடு!

Next Post

நோயாளிகளை வஞ்சிப்பதாக புகார் : சித்த மருத்துவமனையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies