அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி : கறிக்கோழி இறைச்சி இனி கனவில்தானா....?
Apr 29, 2026, 05:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி : கறிக்கோழி இறைச்சி இனி கனவில்தானா….?

Murugesan M by Murugesan M
Dec 27, 2025, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கறிக்கோழி பண்ணை விவசாயிகள் உற்பத்தி நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். இதனால் மக்களின் முக்கிய ப்ரோட்டின் உணவான கோழி இறைச்சி விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பைத் தற்போது பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் அசைவ உணவு பிரியர்களின் மிக முக்கிய உணவாகக் கோழி இறைச்சி உள்ளது.‌ தமிழ்நாட்டில் மட்டும் தினசரி மூன்று லட்சம் கிலோ கோழி இறைச்சி விற்பனை ஆகிறது. அதிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் நான்கு லட்சம் கிலோ கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு காலத்தில் கோழி இறைச்சியை பரவலாக உண்ணும் வழக்கம் இல்லாமல் இருந்த நிலையில், பண்ணை கறிக்கோழிகள் வரத் துவங்கிய பின்னர் சாதாரண பாமர மக்களும் எளிதில் அசைவ உணவு உண்ணும் நிலையை அடைந்தனர்.‌

விலை குறைவு, அதிக புரோட்டின் என எளிய மக்களின் விருப்ப உணவாகக் கோழி இறைச்சி உள்ளது. இந்நிலையில்தான் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் கோழி பண்ணைகள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள ஏராளமான விவசாயிகள் கறிக்கோழி பண்ணை அமைத்துக் கூலிக்கு கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பிராய்லர் நிறுவனங்களிடமிருந்து கோழிக்குஞ்சுகளைப் பெற்று 42 நாட்களுக்கு வளர்த்துக் கொடுக்கும் பணியைச் செய்து வருகின்றனர்.

இதில் ஒரு கிலோ பிராய்லர் கோழிக்கு 6 ரூபாய் 50 காசு மட்டுமே கூலியாக வழங்கப்படுகிறது. மின் கட்டணம் உயர்வு, கோழிக்குஞ்சுகள் வெப்பநிலையைச் சம நிலையில் வைத்திருக்கத் தேவையான அடுப்புக்கரி மூட்டைகள் என அனைத்தும் பல மடங்கு விலை உயர்ந்த நிலையில் ஆறு ரூபாய் 50 காசு மட்டுமே கூலி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகக் குமுறல் எழுந்துள்ளது.

கூலி உயர்த்தப்படாததோடு பல மடங்கு உயர்ந்துள்ள மூலப் பொருட்கள் விலையால் கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். பிராய்லர் கோழிகளுக்கு 20 ரூபாய், நாட்டுக்கோழி வளர்ப்புக்கு 25 ரூபாய் என கூலியை உயர்த்திக் கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள கறிக்கோழி பண்ணை விவசாயிகள் 1ம் தேதி முதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

புதிய கோழிக்குஞ்சுகள் பெறப்பட மாட்டாது எனவும் அறிவித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கறிக்கோழி வர்த்தகம் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் இன்றியமையாத அசைவ உணவை தங்கு தடையின்றி மக்களுக்கு வழங்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கால்நடை பராமரிப்பு துறை, கறிக்கோழி உற்பத்தியாளர்கள், பண்ணை விவசாயிகள் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து தீர்வு காண வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.

இல்லையேல் அறிவித்தபடி உற்பத்தி நிறுத்தப் போராட்டம் 1ம் தேதி தொடங்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: non vegNEWS TODAYtoday newsA shock for non-vegetarian lovers: Will chicken meat now only be a dream...?அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி
ShareTweetSendShare
Previous Post

சொத்து விவரங்கள் – ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கெடு!

Next Post

நோயாளிகளை வஞ்சிப்பதாக புகார் : சித்த மருத்துவமனையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு!

Related News

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்!

இன்றைய தங்கம் விலை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விஜய் – வேலுடன் விஸ்வரூப தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

கோடை வெயில் எதிரொலி – டெல்லியில் பள்ளிகள் நேரம் மாற்றம்!

காங்கிரஸில் இணைந்தது தான் ஆபத்தான விஷயம் – ராகுலின் கேள்விக்கு மாணவி கொடுத்த பதில்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies