திருப்பரங்குன்றத்தில் உள்ளது எல்லைக் கல் என்றால், அதற்கான ஆதாரத்தைத் திமுக காட்ட வேண்டும் என இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாகக் கோவையில் அவர் அளித்த பேட்டியில்,
திமுக அரசு, ஹிந்து விரோதமாகவும், கடவுள் நம்பிக்கையற்ற அரசாகவும் செயல்பட்டு வருகிறது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டும் தீபமேற்ற அனுமதி இல்லை என்றும் சிறுபான்மையினரை திருப்திபடுத்த சந்தனக்கூடு விழாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.
நீதிமன்றத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் சாட்டினார். திருப்பரங்குன்றத்தில் உள்ளது எல்லைக் கல் என்பதற்கான ஆதாரத்தை திமுக காட்ட வேண்டும் என்றும் தீபத்தூண்தான் என்பதற்கு அதில் உள்ள ஹனுமன் படமே சாட்சி என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.
















