ஆந்திராவில் 8 பேரை திருமணம் செய்து ஏமாற்றி நகை, பணத்துடன் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த வாணி என்பவருக்கும், கர்நாடகாவை சேர்ந்த நபருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த பிறகு அவர் தனது கணவருடன் ரயிலில் கர்நாடகாவுக்கு சென்றுகொண்டிருந்தார்.
அப்போது திடீரென வாணி காணாமல்போனதால் புதுமாப்பிள்ளை மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாகப் போலீசார் நடத்திய விசாரணையில் அப்பெண், இதேபோன்று 8 பேரை திருமணம் செய்து நகை, பணத்துடன் மாயமானது தெரியவந்தது.
இது தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில் வாணி மற்றும் அவரது உறவினர் சந்தியா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
















