அசாமில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 11 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
பெயர் விடுபட்ட வாக்காளர்கள் ஆட்சேபணை தெரிவிக்கவும், மீண்டும் பதிவுசெய்ய விண்ணப்பிக்கவும் ஜனவரி 22-ம் தேதி கடைசி நாள் எனத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
அடுத்த ஆண்டு அசாம் மாநிலத்திற்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வரும் பிப்ரவரி 10 -ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
















