ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர்.
ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் தெற்கு கெர்சன் பிராந்தியத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது ஒரு ஓட்டலில் உக்ரைன் படைகள் நடத்திய டிரோன் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 24 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர கிராமமான கோர்லியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்ற இடத்தில் 3 டிரோன்கள் தாக்கியதாகவும், இது பொதுமக்களுக்கு எதிரான ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்றும் ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட கவர்னர் சால்டோ குற்றம் சாட்டியுள்ளார்.
















