கலீதா ஜியா இறுதிச்சடங்கில் ஜெய்சங்கர் : இந்தியாவின் ராஜதந்திரம் - சிறப்பு தொகுப்பு!
Jan 14, 2026, 01:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கலீதா ஜியா இறுதிச்சடங்கில் ஜெய்சங்கர் : இந்தியாவின் ராஜதந்திரம் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 2, 2026, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேச முன்னாள் மற்றும் முதல் பெண் பிரதமரான கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கில் இந்தியாவின் சார்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கலந்து கொண்டுள்ளார். இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் அதிகரித்துள்ள சூழலில் ஜெய்சங்கரின் வங்கதேச பயணம் இந்தியாவின் ராஜதந்திர நகர்வாக பார்க்கப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

இதயம் மற்றும் நுரையீரல் தொற்றுநோய்க்குச் சிகிச்சை எடுத்துவந்த வங்கதேசத்தின் முன்னாள் மற்றும் முதல் பெண் பிரதமரான கலீதா ஜியா தனது 80வது வயதில் கடந்த செவ்வாய் கிழமை டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார்.

1991 ஆம் ஆண்டு மற்றும் 2001 ஆம் ஆண்டு என இரு முறை வங்கதேசத்தின் பிரதமராக இருந்த வங்கதேச தேசியவாதக் கட்சியின் தலைவரான கலீதா ஜியாவின் மறைவுக்கு 3 நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கும் அந்நாட்டு இடைக்கால அரசு, அவரது ஜனாஸா தொழுகை நடைபெறும் நாளை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், அவரின் இறுதிச் சடங்கில் இந்தியாவின் சார்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. அதிலிருந்தே, வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான அரசியல் சூழல் ஏற்பட்டது.

முகமது யூனுஸின் வெளியுறவுக் கொள்கை இந்தியாவுக்கு எதிராக இருப்பதால் இருநாட்டு உறவிலும் விரிசல் விழுந்துள்ளது.

இந்தச் சூழலில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் வங்கதேச பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதாவது, விலகி இருப்பதை விட, இணைந்து செயல்படவே இந்தியா முன்னுரிமை அளிக்கிறது என்ற இராஜதந்திர நகர்வாகவே ஜெய்சங்கரின் பயணம் பார்க்கப்படுகிறது.

நிச்சயமற்ற அரசியல் சூழல்களில் சிக்கிக் கொள்ளாமல், நீண்ட கால தேசிய நலன்களில் இருதரப்பு உறவுகள் வேரூன்றியுள்ளன என்பதையும் ஜெய்சங்கரின் பயணம் குறிக்கிறது.

இதன் மூலம் இக்கட்டான தருணத்தில்,வங்கதேச மக்களுக்கும் அவர்களின் ஜனநாயகத்துக்கும் உரிய மரியாதையை இந்தியா செலுத்தியுள்ளது வெளிப்படுகிறது.

வங்கதேசத்தில் உள்நாட்டுக் குழப்பத்தில் வெளிநாட்டு அந்நிய சக்திகள் மீன் பிடிப்பதற்குத் தயாராகிவரும் நேரத்தில் ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவர் அல்லது கட்சியின் நண்பராக இல்லாமல், இந்தியா தன்னை வங்கதேசத்தின் நண்பர் என்பதை நிரூபித்துள்ளது.

வங்கதேசத்தில் ஆட்சியில் இருந்தாலும், அரசியலமைப்புச் சட்டத்துக்குட்பட்ட, முற்போக்கான மற்றும் பயங்கரவாதமற்ற ஜனநாயக சக்திகளையே இந்தியா ஆதரிக்கும் என்ற ஒரே செய்தியை இந்த கலீதா ஜியாவின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதன் மூலம் மௌனமாக கூறியுள்ளது. அடுத்த பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள தேர்தலின் முடிவுகள் எப்படி இருந்தாலும், இருதரப்பு உறவுகளைப் பாதுகாக்கும் இந்தியாவின் நம்பகத் தன்மையை ஜெய்சங்கரின் வங்கதேச பயணம் குறிக்கிறது.

Tags: delhi bangladesh protestndia's External Affairs Minister S. Jaishankarbangladesh hindu protestuneral of Khaleda Ziaprotest violence bangladeshJaishankar's visit to Bangladeshprotest movement bangladeshbangladesh minority protesthindu killing bangladesh protestj bangladesh minorities protestopposition protest bangladeshBangladesh protestindia protest against bangladeshprotest in bangladeshbangladesh protestsbangladesh protest indiabangladesh violence protest
ShareTweetSendShare
Previous Post

திண்டுக்கல் அருகே காவல் நிலையம் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற வடமாநில இளைஞர் – பத்திரமாக மீட்பு!

Next Post

ராமநாதபுரம் உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் ஆருத்ரா தரிசன விழா!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies