கலீதா ஜியா இறுதிச்சடங்கில் ஜெய்சங்கர் : இந்தியாவின் ராஜதந்திரம் - சிறப்பு தொகுப்பு!
Sep 13, 2026, 02:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கலீதா ஜியா இறுதிச்சடங்கில் ஜெய்சங்கர் : இந்தியாவின் ராஜதந்திரம் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 2, 2026, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வங்கதேச முன்னாள் மற்றும் முதல் பெண் பிரதமரான கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கில் இந்தியாவின் சார்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கலந்து கொண்டுள்ளார். இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் அதிகரித்துள்ள சூழலில் ஜெய்சங்கரின் வங்கதேச பயணம் இந்தியாவின் ராஜதந்திர நகர்வாக பார்க்கப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

இதயம் மற்றும் நுரையீரல் தொற்றுநோய்க்குச் சிகிச்சை எடுத்துவந்த வங்கதேசத்தின் முன்னாள் மற்றும் முதல் பெண் பிரதமரான கலீதா ஜியா தனது 80வது வயதில் கடந்த செவ்வாய் கிழமை டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார்.

1991 ஆம் ஆண்டு மற்றும் 2001 ஆம் ஆண்டு என இரு முறை வங்கதேசத்தின் பிரதமராக இருந்த வங்கதேச தேசியவாதக் கட்சியின் தலைவரான கலீதா ஜியாவின் மறைவுக்கு 3 நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கும் அந்நாட்டு இடைக்கால அரசு, அவரது ஜனாஸா தொழுகை நடைபெறும் நாளை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், அவரின் இறுதிச் சடங்கில் இந்தியாவின் சார்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. அதிலிருந்தே, வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான அரசியல் சூழல் ஏற்பட்டது.

முகமது யூனுஸின் வெளியுறவுக் கொள்கை இந்தியாவுக்கு எதிராக இருப்பதால் இருநாட்டு உறவிலும் விரிசல் விழுந்துள்ளது.

இந்தச் சூழலில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் வங்கதேச பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதாவது, விலகி இருப்பதை விட, இணைந்து செயல்படவே இந்தியா முன்னுரிமை அளிக்கிறது என்ற இராஜதந்திர நகர்வாகவே ஜெய்சங்கரின் பயணம் பார்க்கப்படுகிறது.

நிச்சயமற்ற அரசியல் சூழல்களில் சிக்கிக் கொள்ளாமல், நீண்ட கால தேசிய நலன்களில் இருதரப்பு உறவுகள் வேரூன்றியுள்ளன என்பதையும் ஜெய்சங்கரின் பயணம் குறிக்கிறது.

இதன் மூலம் இக்கட்டான தருணத்தில்,வங்கதேச மக்களுக்கும் அவர்களின் ஜனநாயகத்துக்கும் உரிய மரியாதையை இந்தியா செலுத்தியுள்ளது வெளிப்படுகிறது.

வங்கதேசத்தில் உள்நாட்டுக் குழப்பத்தில் வெளிநாட்டு அந்நிய சக்திகள் மீன் பிடிப்பதற்குத் தயாராகிவரும் நேரத்தில் ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவர் அல்லது கட்சியின் நண்பராக இல்லாமல், இந்தியா தன்னை வங்கதேசத்தின் நண்பர் என்பதை நிரூபித்துள்ளது.

வங்கதேசத்தில் ஆட்சியில் இருந்தாலும், அரசியலமைப்புச் சட்டத்துக்குட்பட்ட, முற்போக்கான மற்றும் பயங்கரவாதமற்ற ஜனநாயக சக்திகளையே இந்தியா ஆதரிக்கும் என்ற ஒரே செய்தியை இந்த கலீதா ஜியாவின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதன் மூலம் மௌனமாக கூறியுள்ளது. அடுத்த பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள தேர்தலின் முடிவுகள் எப்படி இருந்தாலும், இருதரப்பு உறவுகளைப் பாதுகாக்கும் இந்தியாவின் நம்பகத் தன்மையை ஜெய்சங்கரின் வங்கதேச பயணம் குறிக்கிறது.

Tags: delhi bangladesh protestndia's External Affairs Minister S. Jaishankarbangladesh hindu protestuneral of Khaleda Ziaprotest violence bangladeshJaishankar's visit to Bangladeshprotest movement bangladeshbangladesh minority protesthindu killing bangladesh protestj bangladesh minorities protestopposition protest bangladeshBangladesh protestindia protest against bangladeshprotest in bangladeshbangladesh protestsbangladesh protest indiabangladesh violence protest
Share
Tweet
SendShare
Previous Post

திண்டுக்கல் அருகே காவல் நிலையம் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற வடமாநில இளைஞர் – பத்திரமாக மீட்பு!

Next Post

ராமநாதபுரம் உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் ஆருத்ரா தரிசன விழா!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies