ஆலங்காயம் அருகே குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்களுடன் இணைந்து காவல் உதவி ஆய்வாளர் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் காவல் நிலையத்தில் விஜய் என்பவர் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
இரு தினங்களுக்கு முன்பு ஆங்கில புத்தாண்டையொட்டி நிம்மியம்பட்டு பேருந்து நிலையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, குற்ற வழக்கில் தொடர்புடைய கிருஷ்ணமூர்த்தி, தேவேந்திரன், சதீஷ் மற்றும் அவரது நண்பர்களுடன் இணைந்து கேக் வெட்டி நள்ளிரவு ஆங்கில புத்தாண்டை கொண்டாடியுள்ளார்.
இந்நிலையில், காவல் உதவி ஆய்வாளருக்கு குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் கேக் ஊட்டி கொண்டாடி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
















