ஒரே நேரத்தில் ரெண்டு குறி : பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி - சிறப்பு தொகுப்பு!
Mar 15, 2026, 05:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே நேரத்தில் ரெண்டு குறி : பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 3, 2026, 06:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முழுவதும் உள்நாட்டிலேயே தயாரித்த 2 ‘பிரளய்’ ஏவுகணைகளை ஒரே நேரத்தில் வெற்றிகரமாக சோதனை செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது. அது பற்றிய செய்தி தொகுப்பு.

ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் பாதுகாப்புத் துறையிலும் இந்தியா தன்னிறைவு பாரதத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது.

இந்திய முப்படைகளுக்குத் தேவையான அதிநவீன ஏவுகணைகள் உட்பட ஆயுதங்களை டி.ஆர்.டி.ஓ. தயாரித்து வருகிறது.

அந்த வரிசையில், ஒடிசாவில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இரண்டு பிரளய் ஏவுகணைகளை ஒரே ஏவுகலனில் இருந்து மிகக் குறைந்த நேர இடைவெளியில் செலுத்தி DRDO வெற்றிகரமான சோதனை செய்துள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியாக கருதப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை மிகத் துல்லியமாகத் தாக்கி அழித்ததாக DRDO அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், இந்தச் சோதனை தொடர்பான வீடியோவை DRDO தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

DRDO மூத்த விஞ்ஞானிகள், இந்திய விமானப்படை மற்றும் இந்திய ராணுவத்தின் பிரதிநிதிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது

‘பிரளய்’ என்பது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, திட எரிபொருளால் இயங்கும் (Quasi-ballistic) ‘குவாசி-பாலிஸ்டிக்’ ஏவுகணையாகும். இது மிகத் துல்லியமான தாக்குதலை உறுதி செய்ய அதிநவீன வழிகாட்டுதல் மற்றும் வழிசெலுத்தல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஏவுகணையாகும். எதிரி ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளிடம் சிக்காமல், நடுவானில் தனது பாதையை மாற்றிக்கொள்ளும் (Manoeuvrable) திறனும் இந்த ஏவுகணைக்கு உண்டு என்று கூறப்படுகிறது.

இந்த ‘பிரளய்’ ஏவுகணை பல்வேறு இலக்குகளுக்கு எதிராகப் பல வகையான போர்த் தளவாடங்களை (Warheads) சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும்.

மேலும், 500 கிலோ முதல் 1,000 கிலோ வரை வெடிபொருட்களை சுமந்து செல்லக் கூடிய இந்த ஏவுகணை 150 முதல் 500 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளை இந்த ஏவுகணை மிகத் துல்லியமாக அழிக்கும் ஆற்றல் கொண்டதாகும்.

பிரளய் ஏவுகணை சோதனை வெற்றிக்காக DRDO, இந்திய இராணுவம்,விமானப்படை சம்பந்தப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களுக்கும் இந்தப் பணியில் ஈடுபட்ட அனைத்து பணியாளர்களுக்கும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரளய் ஏவுகணையின் இந்த ‘சால்வோ’ ஏவுதல் வெற்றிகரமாக முடிந்தது, ஏவுகணையின் நம்பகத்தன்மையை நிலைநாட்டியுள்ளது என்றும் ராஜ்நாத் கூறியுள்ளார்.

இந்தச் சோதனையில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளரும், டி.ஆர்.டி.ஓ தலைவருமான டாக்டர் சமீர் வி காமத், இந்த ‘பிரளய்’ ஏவுகணை அமைப்பு இந்தியப் பாதுகாப்புப் படைகளில் இணைக்கப்படுவதற்கு முழுஅளவில் தயாராக உள்ளது என்றும் உறுதிப் படுத்தியுள்ளார்.

Tags: indigenously developed 'Pralay' missilesAtmanirbhar BharatodishaSelf-Reliant IndiaDefence Research and Development Organisation'Pralay' missiles
ShareTweetSendShare
Previous Post

வான் பாதுகாப்பை பலப்படுத்த புதிய திட்டம் : S-350 வித்யாஸ்-ஐ இந்தியாவில் தயாரிக்க ரஷ்யா அனுமதி : சிறப்பு தொகுப்பு!

Next Post

இரண்டு நாள் பயணமாக ளை தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies