சேலம் சுகவனேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிபோனதற்கு அறநிலைத்துறையும், கோயில் நிர்வாகமுமே காரணம் என திருத்தொண்டர்கள் சபை தலைவர் அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
சேலம் தொண்டை மண்டல வேளாளர் அபிவிருத்தி சங்கம் சார்பில் 1962ஆம் ஆண்டு ஐந்து ரோடு பகுதியில் 5 ஆயிரத்து 916 சதுர அடி நிலத்தின் ஒரு பகுதியை சுகனேஸ்வரர் கோயில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் மேற்கொள்வதற்காக முன்னோர்கள் உயில் மூலம் எழுதி வைத்தனர்.
இந்த சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த சங்கத்தின் பெயரில் மதுரையை சேர்ந்தவர்கள் ஆருத்ரா தரிசனத்திற்கு மறுநாள் சிறப்பு பூஜைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, சுகனேஸ்வரர் கோயிலில் நடந்த பூஜையில் திருத்தொண்டர்கள் சபை தலைவர் அல்லிகுட்டை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அல்லிகுட்டை ராதாகிருஷ்ணன், சுகனேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் உள்ள சொத்துக்கள் அரசியல்வாதிகளின் கைகளில் உள்ளதாக கூறினார்.
















