நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிட்டு திருப்பரங்குன்றம் தர்கா சந்தனக்கூடு விழாவில் கூடுதல் நபர்கள் செல்ல போலீசார் அனுமதி வழங்கியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு விழா நடைபெற்றது. இதில், 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சந்தனக் குடம் எடுத்துச் சென்றபோது கூடுதல் நபர்களை அனுமதிக்க வேண்டும் என தர்கா தரப்பினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முதலில் நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி அனுமதி மறுத்த போலீசார், பின்னர்
சந்தனக் குடத்துடன் சென்றவர்கள் கீழே இறங்குவதற்கு முன்பே மற்றவர்கள் தர்காவிற்கு செல்ல அனுமதித்தனர்.
நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிடும் வகையில் காவல்துறை நடந்து கொண்டது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
















