தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு இசை அஞ்சலி செலுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் காவிரிக்கரையில் சங்கீத மும்மூர்த்திகளின் ஒருவரான
ஸ்ரீதியாகராஜரின் நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் இசை கலைஞர்களால் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், 179 ஆராதனை விழா கடந்த 3ஆம் தேதி தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் பிரபல கர்நாடக இசை கலைஞர்கள் கலந்து கொண்டு தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.
விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்ச ரத்ன கீர்த்தனை விமரிசையாக நடைபெற்றது. பின்னணி பாடகிகள் மஹதி, சுதா ரகுநாதன், நித்யஸ்ரீ, ஜனனி உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு தியாகராஜரின் ஐந்து கீர்த்தனைகளை ஒரே நேரத்தில் – ஒரே ராகத்தில் பாடி அவருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.
















