உலகப்புகழ் பெற்ற மதுரை அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசு எடுத்து நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளை மாவட்ட நிர்வாகம் நடத்துவதற்கு எதிராக தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜல்லிக்கட்டு போட்டி ஒன்றும் ஐபிஎல் விளையாட்டு கிடையாது என குறிப்பிட்ட நீதிபதிகள்,
தனி நபர்கள் நடத்தியதால்தான் கடந்த கால போட்டிகளில் பிரச்னை எழுந்ததாகவும் குறிப்பிட்டனர்.
எனவே, இத்தகைய சூழலில் ஜல்லிக்கட்டு போட்டிகளை தனி நபர் நடத்துவது பொருத்தமாக இருக்காது என்பதால்,
மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே எடுத்து நடத்த உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
















