நெல்லை பணகுடியில் அரிவாளால் வெட்டப்பட்ட 10 ஆம் வகுப்பு மாணவர் சிகிச்சை பலன்றி உயிரிழந்தார்.
பணகுடி பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் லெட்சுமணன் அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர், கடந்த 5 ஆம் தேதி அதே பகுதியில் வசிக்கும் சபரிராஜன் என்பரின் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது லெட்சுமணனை, சபரிராஜன் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த லெட்சுமணன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரி பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி லெட்சுமணன் உயிரிழந்தார்.
சபரிராஜன் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















