5 ஏக்கரில்1200-க்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்கள் : இயற்கை விவசாயிக்கு குவியும் பாராட்டு - சிறப்பு கட்டுரை!
Jan 13, 2026, 10:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

5 ஏக்கரில்1200-க்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்கள் : இயற்கை விவசாயிக்கு குவியும் பாராட்டு – சிறப்பு கட்டுரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 9, 2026, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

5 ஏக்கர் நிலத்தில் 1200க்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்களை ஒரே நேரத்தில் விதைத்து வெற்றிகரமாக சாகுபடி செய்திருக்கும் காரைக்காலைச் சேர்ந்த இயற்கை விவசாயி ஒருவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. யார் அந்த விவசாயி ? பாரம்பரிய நெல் ரகங்களை மீட்க அவர் செய்த முயற்சிகள் என்னென்ன என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

வளர்ந்துவரும் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப மகசூலை பெருக்குவதற்காக பல்வேறு வகையிலான ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உரத் தட்டுப்பாடு, நிலத்தடி நீர் பாதிப்பு என விவசாயம் பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நிலையில் 5 ஏக்கர் நிலத்தில் 1200 பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து காரைக்கால் விவசாயி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் வரிச்சுக்குடி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயியான பாஸ்கர், இத்தகைய சாதனையை படைத்துள்ளார்.

நம்மாழ்வார் மீதும் இயற்கை விவசாயத்தின் மீதும் அதீத பற்றுக் கொண்டிருக்கும் பாஸ்கர், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய நெல் ரகங்களை மீட்க முயற்சி செய்துள்ளார். அதன் பயனாகவே, தற்போது 1200 நெல் ரகங்களை நேரடி முறையில் சாகுபடி செய்து அறுவடைக்கும் தயார் செய்துள்ளார்.

5 ஏக்கர் நிலப்பரப்பில் தனித்தனியே பாத்திகட்டி, சம்பா, பிச்சைவாரி, சிவப்பு கவுனி, என பல்வேறு அரிய வகை நெல் ரகங்களோடு பாஸ்கர் உருவாக்கியிருக்கும் இந்த நெல் வயல் விவசாய ஆராய்ச்சி கூடமாகவே மாறியுள்ளது.

அரிய வகை நெல் ரகங்களான கருடன் சம்பா, வாழைப்பூ சம்பா, காட்டுயானம், மடுமுழுங்கி என பல்வேறு விதமான பாரம்பரிய நெல்ரகங்களை மீட்டு அவற்றை வெற்றிகரமாக சாகுபடியும் செய்துள்ளார். 1200க்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்களை வேளாண் கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டதோடு, தான் மீட்டெடுத்த நெல் ரகங்களை அண்டை மாநிலங்களிலும் விற்பனை செய்து வருகிறார். ஆயிரக்கணக்கான பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு விவசாயத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் இயற்கை விவசாயி பாஸ்கருக்கு புதுச்சேரி அரசாங்கம் உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: BhaskarKARAIKALnatural farmertraditional rice varietiesVarichikudi village
ShareTweetSendShare
Previous Post

கொடைக்கானலில் ரோப் கார் சேவை – தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு!

Next Post

விருதுநகரில் “நம்ம ஊரு மோடி பொங்கல்” விழா – உற்சாக கொண்டாட்டம்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

Load More

அண்மைச் செய்திகள்

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

2026-ல் அமையும் தேசிஜ கூட்டணி ஆட்சியில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies