5 ஏக்கரில்1200-க்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்கள் : இயற்கை விவசாயிக்கு குவியும் பாராட்டு - சிறப்பு கட்டுரை!
Jul 29, 2026, 06:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

5 ஏக்கரில்1200-க்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்கள் : இயற்கை விவசாயிக்கு குவியும் பாராட்டு – சிறப்பு கட்டுரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 9, 2026, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

5 ஏக்கர் நிலத்தில் 1200க்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்களை ஒரே நேரத்தில் விதைத்து வெற்றிகரமாக சாகுபடி செய்திருக்கும் காரைக்காலைச் சேர்ந்த இயற்கை விவசாயி ஒருவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. யார் அந்த விவசாயி ? பாரம்பரிய நெல் ரகங்களை மீட்க அவர் செய்த முயற்சிகள் என்னென்ன என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

வளர்ந்துவரும் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப மகசூலை பெருக்குவதற்காக பல்வேறு வகையிலான ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உரத் தட்டுப்பாடு, நிலத்தடி நீர் பாதிப்பு என விவசாயம் பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நிலையில் 5 ஏக்கர் நிலத்தில் 1200 பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து காரைக்கால் விவசாயி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் வரிச்சுக்குடி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயியான பாஸ்கர், இத்தகைய சாதனையை படைத்துள்ளார்.

நம்மாழ்வார் மீதும் இயற்கை விவசாயத்தின் மீதும் அதீத பற்றுக் கொண்டிருக்கும் பாஸ்கர், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய நெல் ரகங்களை மீட்க முயற்சி செய்துள்ளார். அதன் பயனாகவே, தற்போது 1200 நெல் ரகங்களை நேரடி முறையில் சாகுபடி செய்து அறுவடைக்கும் தயார் செய்துள்ளார்.

5 ஏக்கர் நிலப்பரப்பில் தனித்தனியே பாத்திகட்டி, சம்பா, பிச்சைவாரி, சிவப்பு கவுனி, என பல்வேறு அரிய வகை நெல் ரகங்களோடு பாஸ்கர் உருவாக்கியிருக்கும் இந்த நெல் வயல் விவசாய ஆராய்ச்சி கூடமாகவே மாறியுள்ளது.

அரிய வகை நெல் ரகங்களான கருடன் சம்பா, வாழைப்பூ சம்பா, காட்டுயானம், மடுமுழுங்கி என பல்வேறு விதமான பாரம்பரிய நெல்ரகங்களை மீட்டு அவற்றை வெற்றிகரமாக சாகுபடியும் செய்துள்ளார். 1200க்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்களை வேளாண் கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டதோடு, தான் மீட்டெடுத்த நெல் ரகங்களை அண்டை மாநிலங்களிலும் விற்பனை செய்து வருகிறார். ஆயிரக்கணக்கான பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு விவசாயத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் இயற்கை விவசாயி பாஸ்கருக்கு புதுச்சேரி அரசாங்கம் உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: BhaskarKARAIKALnatural farmertraditional rice varietiesVarichikudi village
ShareTweetSendShare
Previous Post

கொடைக்கானலில் ரோப் கார் சேவை – தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு!

Next Post

விருதுநகரில் “நம்ம ஊரு மோடி பொங்கல்” விழா – உற்சாக கொண்டாட்டம்!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies