5 ஏக்கரில்1200-க்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்கள் : இயற்கை விவசாயிக்கு குவியும் பாராட்டு - சிறப்பு கட்டுரை!
Jun 14, 2026, 01:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

5 ஏக்கரில்1200-க்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்கள் : இயற்கை விவசாயிக்கு குவியும் பாராட்டு – சிறப்பு கட்டுரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 9, 2026, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

5 ஏக்கர் நிலத்தில் 1200க்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்களை ஒரே நேரத்தில் விதைத்து வெற்றிகரமாக சாகுபடி செய்திருக்கும் காரைக்காலைச் சேர்ந்த இயற்கை விவசாயி ஒருவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. யார் அந்த விவசாயி ? பாரம்பரிய நெல் ரகங்களை மீட்க அவர் செய்த முயற்சிகள் என்னென்ன என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

வளர்ந்துவரும் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப மகசூலை பெருக்குவதற்காக பல்வேறு வகையிலான ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உரத் தட்டுப்பாடு, நிலத்தடி நீர் பாதிப்பு என விவசாயம் பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நிலையில் 5 ஏக்கர் நிலத்தில் 1200 பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து காரைக்கால் விவசாயி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் வரிச்சுக்குடி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயியான பாஸ்கர், இத்தகைய சாதனையை படைத்துள்ளார்.

நம்மாழ்வார் மீதும் இயற்கை விவசாயத்தின் மீதும் அதீத பற்றுக் கொண்டிருக்கும் பாஸ்கர், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய நெல் ரகங்களை மீட்க முயற்சி செய்துள்ளார். அதன் பயனாகவே, தற்போது 1200 நெல் ரகங்களை நேரடி முறையில் சாகுபடி செய்து அறுவடைக்கும் தயார் செய்துள்ளார்.

5 ஏக்கர் நிலப்பரப்பில் தனித்தனியே பாத்திகட்டி, சம்பா, பிச்சைவாரி, சிவப்பு கவுனி, என பல்வேறு அரிய வகை நெல் ரகங்களோடு பாஸ்கர் உருவாக்கியிருக்கும் இந்த நெல் வயல் விவசாய ஆராய்ச்சி கூடமாகவே மாறியுள்ளது.

அரிய வகை நெல் ரகங்களான கருடன் சம்பா, வாழைப்பூ சம்பா, காட்டுயானம், மடுமுழுங்கி என பல்வேறு விதமான பாரம்பரிய நெல்ரகங்களை மீட்டு அவற்றை வெற்றிகரமாக சாகுபடியும் செய்துள்ளார். 1200க்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்களை வேளாண் கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டதோடு, தான் மீட்டெடுத்த நெல் ரகங்களை அண்டை மாநிலங்களிலும் விற்பனை செய்து வருகிறார். ஆயிரக்கணக்கான பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு விவசாயத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் இயற்கை விவசாயி பாஸ்கருக்கு புதுச்சேரி அரசாங்கம் உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: BhaskarKARAIKALnatural farmertraditional rice varietiesVarichikudi village
ShareTweetSendShare
Previous Post

கொடைக்கானலில் ரோப் கார் சேவை – தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு!

Next Post

விருதுநகரில் “நம்ம ஊரு மோடி பொங்கல்” விழா – உற்சாக கொண்டாட்டம்!

Related News

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies