சபரிமலை கோயில் தங்க திருட்டு வழக்கில் தொடர்புள்ளதாகக் கோயிலின் தலைமை அர்ச்சகரைச் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் கைது செய்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க திருட்டு வழக்கில், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளைச் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். வழக்கில் இதுவரை தேவசம் போர்டு முன்னாள் தலைவர் உட்பட 10 பேர் கைதாகியுள்ள நிலையில், கோயிலின் தலைமை அர்ச்சகர் தந்திரி கண்டரரு ராஜீவரு-வை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட உன்னி கிருஷ்ணனுடன் ராஜீவரு-வுக்கு நெருங்கிய நட்பு இருந்ததாகவும், தங்க திருட்டு வழக்கில் அவருக்குத் தொடர்பு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















