நெல்லை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தென் தமிழகம் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதனால் பாதுகாப்பு கருதி நெல்லை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் எச்சரித்தனர். அதன் எதிரொலியாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.
தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.
அதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்ததால், மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
இதனால், 5 கோடி முதல் 10 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
















