கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை நாட்டை விட்டுக்கொடுக்க மாட்டோம் என அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கியூபா அதிபர் பெர்முடேஸ் பதிலளித்துள்ளார்.
வெனிசுலாவைத் தொடர்ந்து, அதன் நெருங்கிய நட்பு நாடான கியூபாவுக்கு அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் எச்சரிக்கைக்கு கியூபா அதிபர் பெர்முடேஸ் பதிலளித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கியூபா ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு என்றும், தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை யாரும் சொல்ல வேண்டியதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை நாட்டை விட்டுக்கொடுக்க மாட்டோம் எனக்கூறியுள்ள அவர், மனித உயிர்கள் உட்பட அனைத்தையுமே வர்த்தகமாக மாற்றியவர்களுக்கு கியூபாவை பற்றி பேச எந்த தார்மீக உரிமையும் இல்லை என கூறியுள்ளார்.
















