வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் - வனவிலங்குகளை காக்க கோரிக்கை!
Mar 15, 2026, 03:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Manikandan by Manikandan
Jan 13, 2026, 09:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதுமலை வனப்பகுதியை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ள கேடு விளைவிக்கும் அந்நிய நாட்டு பார்த்தீனிய செடிகளை அகற்ற நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. வன விலங்குகளின் உயிர் குடிக்கும் செடிகளை பற்றிய செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

முதுமலை புலிகள் காப்பகம், நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய வனவிலங்கு சரணாலயமாகும். இது யானைகள், புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் வாழ்விடமாக மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் எல்லைப் பகுதியாகவும் அமைந்துள்ளது. சந்தனம், தேக்கு உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகைகளும் இங்கு கொட்டி கிடக்கின்றன. அது மட்டுமின்றி வனவிலங்கு சரணாலயம், யானைகள் முகாம், காட்டு சஃபாரி போன்ற சுற்றுலா அம்சங்கள் உள்ளதால் இப்பகுதி சுற்றுலா பயணிகளின் விருப்ப தேர்வாக உள்ளது.

ரம்மியமான சூழலில் காட்சியளிக்கும் இப்பகுதி கோடை காலத்தில் சில நேரங்களில் வறட்சியால் பாதிக்கப்படுகின்றன. அந்த சமயத்தில் காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள் போன்ற தாவர உண்ணிகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடும் ஏற்படுகிறது. இதனால் உணவு தேடி அவை குடியிருப்புகளை நோக்கி படையெடுக்க தொடங்குகின்றன.

தற்போது வறட்சி தொடங்கியுள்ளதால், முதுமலை வனப் பகுதிகளில் மரம், செடி, கொடிகள் அனைத்தும் கருகத் தொடங்கி உள்ளன. ஆனால் வனவிலங்குகள் மட்டுமின்றி சுற்றுச் சூழலுக்கும் கேடு விளைவிக்கும் உன்னி செடிகளோ அடர்ந்து வளர தொடங்கியுள்ளன. வனப்பகுதி முழுவதும் பார்த்தீனியம் செடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு காணப்படுகின்றன. எங்கு திரும்பி பார்த்தாலும் பார்த்தினீய செடிகளே நிரம்பியுள்ளன.

இதனால் காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. வனவிலங்குகளின் உடல் நலன் பாதிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே பார்த்தீனியம் செடிகளை முழுமையாக கட்டுப்படுத்த வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

வட அமெரிக்காவை தாயகமாக கொண்ட இந்த பார்த்தீனியம் செடி நாடு முழுவதும் பரவி உள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக உயிர் சூழல் மண்டலமான நீலகிரி மாவட்டத்தின் முதுமலை, முக்குறுத்தி, பார்சன்வேலி உள்ளிட்ட வனப் பகுதிகளில் அதிகளவு ஆக்கிரமித்துள்ளதாக அவர்கள் புள்ளி விவரங்களுடன் குறிப்பிடுகின்றனர். வனவிலங்குகளுக்கு மட்டுமின்றி மனிதர்களின் உடல் நிலையிலும் கேடு விளைவிக்கும் இவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இயற்கையை பாதுகாக்கும் வனப்பகுதிகளை, ஆக்கிரமித்து கேடு விளைவிக்கும் அந்நிய நாட்டு செடிகளை அகற்ற நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Tags: tamilnadutngovtMudumalai forestParthenium plantsMudumalaiMudumalai Parthenium plants
ShareTweetSendShare
Previous Post

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

Next Post

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies