பாலிவுட்டில் மத பாகுபாடா? : ஏ.ஆர்.ரஹ்மானின் பேட்டியால் வெடித்த சர்ச்சை- சிறப்பு தொகுப்பு!
Mar 15, 2026, 07:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாலிவுட்டில் மத பாகுபாடா? : ஏ.ஆர்.ரஹ்மானின் பேட்டியால் வெடித்த சர்ச்சை- சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 19, 2026, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாலிவுட்டில் மத ரீதியிலான பாகுபாடு உள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்த கருத்துக்கு, கங்கனா ரனாவத் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் தனது கருத்து குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார். அது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அண்மையில் BBC Asian network நிறுவனத்திற்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது, சத்ரபதி சம்பாஜி மகாராஜின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட சாவா திரைப்படம் குறித்தும், அதில் பணியாற்றிய அனுபவம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், சாவா திரைப்படம் பிரிவினையை பேசும் திரைப்படம் எனவும், பிரிவினையை முன்வைத்து அப்படம் பணம் சம்பாதித்ததாக கருதுவதாகவும் கூறினார். மேலும், ரோஜா, பாம்பே, உயிரே ஆகிய 3 படங்களுக்கு இசையமைத்த காலத்தில், இந்தி சினிமாவிற்கு சம்மந்தப்படாத வெளியாள் போல உணர்ந்ததாகவும் தெரிவித்தார்.

ஏன் அவ்வாறு உணர்ந்தீர்கள் என பேட்டி காண்பவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ரஹ்மான், நான் இந்தி மொழி பேசாமல் இருந்தது அதற்கு காரணமாக இருக்கலாம் என தெரிவித்தார். தமிழர்களுக்கு இந்தி கற்றுக்கொள்வது மிகவும் கடினமான காரியம் எனவும், தங்களுக்கு தமிழ்ப்பற்று மிக அதிகமாக உள்ளதாகவும் கூறினார்.

அத்துடன், கடந்த 8 ஆண்டுகளாக தனக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டதாகவும், சினிமா துறை சமூகம் சார்ந்ததாக மாறிவிட்டதாகவும்
ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார். “இசைத்துறையின் அதிகார கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றம் இதற்கு காரணமாக இருக்கலாம். படைப்பாற்றல் இல்லாதவர்கள்தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் இடத்தில் உள்ளனர். இது சமூகம் தொடர்பானதாகவும் இருக்கக்கூடும்” எனவும் அவர் விமர்சன பார்வையை முன்வைத்தார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த கருத்துகள் முக்கிய பேசுபொருளாகின. குறிப்பாக, பாலிவுட்டில் மத ரீதியிலான பாகுபாடு உள்ளதாகவும், அதனால் தனக்கு வாய்ப்புகள் குறைந்ததாகவும் அவர் கூறிய கருத்துக்கு, பலரும் கண்டனம் தெரிவிக்க தொடங்கினர். இது குறித்து கருத்து தெரிவித்த இந்தி பாடலாசிரியரும், திரைக்கதை ஆசிரியருமான ஜாவேத் அக்தர், ரஹ்மானின் கருத்துகளை நான் ஏற்க மாட்டேன் என தெரிவித்துள்ளார். அத்துடன் பாலிவுட் சினிமா சமூக சார்புடையதாக மாறிவிட்டதாக தான் கருதவில்லை எனவும் கூறியுள்ளார்.

அதேபோல, கங்கனா ரனாவத்தும் தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். தான் நடித்த எமர்ஜென்சி படம் தொடர்பாக ரஹ்மானை சந்திக்க சென்றபோது, அவர் சந்திக்க மறுத்துவிட்டதாகவும், பிரச்சார படத்தில் பணியாற்ற முடியாது என அவர் தெரிவித்துவிட்டதாகவும் கங்கனா ரனாவத் குறிப்பிட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற பாரபட்சமும், வெறுப்பும் கொண்ட மனிதரை தான் பார்த்ததே இல்லை எனவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

எழுத்தாளர் ஷோபா டே, பின்னணி பாடகர் ஷான் உள்ளிட்ட பலரும் ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்துக்கு கண்டனமும், எதிர்ப்பும்
தெரிவித்துள்ளனர். மறுபுறம், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரான மெக்பூபா முக்தி, பின்னணி பாடகி சின்மயி உள்ளிட்டோர் ரஹ்மானின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், தனது கருத்து குறித்து ஏ.ஆர்.ரஹ்மானே தற்போது வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். “சில நேரங்களில் நமது நோக்கங்கள் தவறாக புரிந்துகொள்ளப்படும் என்பதை புரிந்துகொள்கிறேன். ஆனால், இசையின் மூலம் கலாச்சாரங்களை உயர்த்துவதும், கொண்டாடுவதும்தான் எனது குறிக்கோள். மாறாக, எந்த சூழலிலும் பிறர் வருந்த வேண்டும் என நான் நினைக்க மாட்டேன்.” என ஏ.ஆர்.ரஹ்மான் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், இந்தியனாக இருப்பதில் பெருமையடைவதாகவும், ஏனெனில், கருத்து சுதந்திரத்திற்கு இந்தியாவில் எப்போதும் வாய்ப்பளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி முன்னிலையில் பல்வேறு இசைக்குழுக்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சி நடத்தியதையும், ராமாயண படத்திற்கு இசையமைத்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாதான் எனது உத்வேகம். இந்தியாதான் எனது ஆசிரியர். இந்தியாதான் எனது எனது வீடு என தெரிவித்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், ஜெய்ஜிந்த், ஜெய் ஹோ எனக்கூறி அந்த வீடியோவை நிறைவு செய்துள்ளார்.

Tags: A.R. RahmanA.R. Rahman comments on religionreligious discrimination in Bollywood.BBC Asian Network.arr initerviewChhatrapati Sambhaji MaharajKANGANA RANAUT
ShareTweetSendShare
Previous Post

மெட்ரோ ரயிலில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனிப்பெட்டி கான இருக்கைகள் – ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

இந்தியா வந்த ஐக்கிய அரபு அமீரக அதிபருக்கு உற்சாக வரவேற்பு – விமான நிலையத்திற்கே சென்று நேரில் வரவேற்றார் பிரதமர் மோடி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies