பாலிவுட்டில் மத பாகுபாடா? : ஏ.ஆர்.ரஹ்மானின் பேட்டியால் வெடித்த சர்ச்சை- சிறப்பு தொகுப்பு!
Jul 29, 2026, 02:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாலிவுட்டில் மத பாகுபாடா? : ஏ.ஆர்.ரஹ்மானின் பேட்டியால் வெடித்த சர்ச்சை- சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 19, 2026, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாலிவுட்டில் மத ரீதியிலான பாகுபாடு உள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்த கருத்துக்கு, கங்கனா ரனாவத் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் தனது கருத்து குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார். அது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அண்மையில் BBC Asian network நிறுவனத்திற்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது, சத்ரபதி சம்பாஜி மகாராஜின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட சாவா திரைப்படம் குறித்தும், அதில் பணியாற்றிய அனுபவம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், சாவா திரைப்படம் பிரிவினையை பேசும் திரைப்படம் எனவும், பிரிவினையை முன்வைத்து அப்படம் பணம் சம்பாதித்ததாக கருதுவதாகவும் கூறினார். மேலும், ரோஜா, பாம்பே, உயிரே ஆகிய 3 படங்களுக்கு இசையமைத்த காலத்தில், இந்தி சினிமாவிற்கு சம்மந்தப்படாத வெளியாள் போல உணர்ந்ததாகவும் தெரிவித்தார்.

ஏன் அவ்வாறு உணர்ந்தீர்கள் என பேட்டி காண்பவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ரஹ்மான், நான் இந்தி மொழி பேசாமல் இருந்தது அதற்கு காரணமாக இருக்கலாம் என தெரிவித்தார். தமிழர்களுக்கு இந்தி கற்றுக்கொள்வது மிகவும் கடினமான காரியம் எனவும், தங்களுக்கு தமிழ்ப்பற்று மிக அதிகமாக உள்ளதாகவும் கூறினார்.

அத்துடன், கடந்த 8 ஆண்டுகளாக தனக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டதாகவும், சினிமா துறை சமூகம் சார்ந்ததாக மாறிவிட்டதாகவும்
ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார். “இசைத்துறையின் அதிகார கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றம் இதற்கு காரணமாக இருக்கலாம். படைப்பாற்றல் இல்லாதவர்கள்தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் இடத்தில் உள்ளனர். இது சமூகம் தொடர்பானதாகவும் இருக்கக்கூடும்” எனவும் அவர் விமர்சன பார்வையை முன்வைத்தார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த கருத்துகள் முக்கிய பேசுபொருளாகின. குறிப்பாக, பாலிவுட்டில் மத ரீதியிலான பாகுபாடு உள்ளதாகவும், அதனால் தனக்கு வாய்ப்புகள் குறைந்ததாகவும் அவர் கூறிய கருத்துக்கு, பலரும் கண்டனம் தெரிவிக்க தொடங்கினர். இது குறித்து கருத்து தெரிவித்த இந்தி பாடலாசிரியரும், திரைக்கதை ஆசிரியருமான ஜாவேத் அக்தர், ரஹ்மானின் கருத்துகளை நான் ஏற்க மாட்டேன் என தெரிவித்துள்ளார். அத்துடன் பாலிவுட் சினிமா சமூக சார்புடையதாக மாறிவிட்டதாக தான் கருதவில்லை எனவும் கூறியுள்ளார்.

அதேபோல, கங்கனா ரனாவத்தும் தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். தான் நடித்த எமர்ஜென்சி படம் தொடர்பாக ரஹ்மானை சந்திக்க சென்றபோது, அவர் சந்திக்க மறுத்துவிட்டதாகவும், பிரச்சார படத்தில் பணியாற்ற முடியாது என அவர் தெரிவித்துவிட்டதாகவும் கங்கனா ரனாவத் குறிப்பிட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற பாரபட்சமும், வெறுப்பும் கொண்ட மனிதரை தான் பார்த்ததே இல்லை எனவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

எழுத்தாளர் ஷோபா டே, பின்னணி பாடகர் ஷான் உள்ளிட்ட பலரும் ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்துக்கு கண்டனமும், எதிர்ப்பும்
தெரிவித்துள்ளனர். மறுபுறம், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரான மெக்பூபா முக்தி, பின்னணி பாடகி சின்மயி உள்ளிட்டோர் ரஹ்மானின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், தனது கருத்து குறித்து ஏ.ஆர்.ரஹ்மானே தற்போது வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். “சில நேரங்களில் நமது நோக்கங்கள் தவறாக புரிந்துகொள்ளப்படும் என்பதை புரிந்துகொள்கிறேன். ஆனால், இசையின் மூலம் கலாச்சாரங்களை உயர்த்துவதும், கொண்டாடுவதும்தான் எனது குறிக்கோள். மாறாக, எந்த சூழலிலும் பிறர் வருந்த வேண்டும் என நான் நினைக்க மாட்டேன்.” என ஏ.ஆர்.ரஹ்மான் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், இந்தியனாக இருப்பதில் பெருமையடைவதாகவும், ஏனெனில், கருத்து சுதந்திரத்திற்கு இந்தியாவில் எப்போதும் வாய்ப்பளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி முன்னிலையில் பல்வேறு இசைக்குழுக்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சி நடத்தியதையும், ராமாயண படத்திற்கு இசையமைத்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாதான் எனது உத்வேகம். இந்தியாதான் எனது ஆசிரியர். இந்தியாதான் எனது எனது வீடு என தெரிவித்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், ஜெய்ஜிந்த், ஜெய் ஹோ எனக்கூறி அந்த வீடியோவை நிறைவு செய்துள்ளார்.

Tags: A.R. RahmanA.R. Rahman comments on religionreligious discrimination in Bollywood.BBC Asian Network.arr initerviewChhatrapati Sambhaji MaharajKANGANA RANAUT
ShareTweetSendShare
Previous Post

மெட்ரோ ரயிலில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனிப்பெட்டி கான இருக்கைகள் – ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

இந்தியா வந்த ஐக்கிய அரபு அமீரக அதிபருக்கு உற்சாக வரவேற்பு – விமான நிலையத்திற்கே சென்று நேரில் வரவேற்றார் பிரதமர் மோடி!

Related News

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies