பாலிவுட்டில் மத பாகுபாடா? : ஏ.ஆர்.ரஹ்மானின் பேட்டியால் வெடித்த சர்ச்சை- சிறப்பு தொகுப்பு!
Sep 12, 2026, 11:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாலிவுட்டில் மத பாகுபாடா? : ஏ.ஆர்.ரஹ்மானின் பேட்டியால் வெடித்த சர்ச்சை- சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 19, 2026, 09:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாலிவுட்டில் மத ரீதியிலான பாகுபாடு உள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்த கருத்துக்கு, கங்கனா ரனாவத் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் தனது கருத்து குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார். அது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அண்மையில் BBC Asian network நிறுவனத்திற்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது, சத்ரபதி சம்பாஜி மகாராஜின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட சாவா திரைப்படம் குறித்தும், அதில் பணியாற்றிய அனுபவம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், சாவா திரைப்படம் பிரிவினையை பேசும் திரைப்படம் எனவும், பிரிவினையை முன்வைத்து அப்படம் பணம் சம்பாதித்ததாக கருதுவதாகவும் கூறினார். மேலும், ரோஜா, பாம்பே, உயிரே ஆகிய 3 படங்களுக்கு இசையமைத்த காலத்தில், இந்தி சினிமாவிற்கு சம்மந்தப்படாத வெளியாள் போல உணர்ந்ததாகவும் தெரிவித்தார்.

ஏன் அவ்வாறு உணர்ந்தீர்கள் என பேட்டி காண்பவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ரஹ்மான், நான் இந்தி மொழி பேசாமல் இருந்தது அதற்கு காரணமாக இருக்கலாம் என தெரிவித்தார். தமிழர்களுக்கு இந்தி கற்றுக்கொள்வது மிகவும் கடினமான காரியம் எனவும், தங்களுக்கு தமிழ்ப்பற்று மிக அதிகமாக உள்ளதாகவும் கூறினார்.

அத்துடன், கடந்த 8 ஆண்டுகளாக தனக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டதாகவும், சினிமா துறை சமூகம் சார்ந்ததாக மாறிவிட்டதாகவும்
ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார். “இசைத்துறையின் அதிகார கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றம் இதற்கு காரணமாக இருக்கலாம். படைப்பாற்றல் இல்லாதவர்கள்தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் இடத்தில் உள்ளனர். இது சமூகம் தொடர்பானதாகவும் இருக்கக்கூடும்” எனவும் அவர் விமர்சன பார்வையை முன்வைத்தார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த கருத்துகள் முக்கிய பேசுபொருளாகின. குறிப்பாக, பாலிவுட்டில் மத ரீதியிலான பாகுபாடு உள்ளதாகவும், அதனால் தனக்கு வாய்ப்புகள் குறைந்ததாகவும் அவர் கூறிய கருத்துக்கு, பலரும் கண்டனம் தெரிவிக்க தொடங்கினர். இது குறித்து கருத்து தெரிவித்த இந்தி பாடலாசிரியரும், திரைக்கதை ஆசிரியருமான ஜாவேத் அக்தர், ரஹ்மானின் கருத்துகளை நான் ஏற்க மாட்டேன் என தெரிவித்துள்ளார். அத்துடன் பாலிவுட் சினிமா சமூக சார்புடையதாக மாறிவிட்டதாக தான் கருதவில்லை எனவும் கூறியுள்ளார்.

அதேபோல, கங்கனா ரனாவத்தும் தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். தான் நடித்த எமர்ஜென்சி படம் தொடர்பாக ரஹ்மானை சந்திக்க சென்றபோது, அவர் சந்திக்க மறுத்துவிட்டதாகவும், பிரச்சார படத்தில் பணியாற்ற முடியாது என அவர் தெரிவித்துவிட்டதாகவும் கங்கனா ரனாவத் குறிப்பிட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற பாரபட்சமும், வெறுப்பும் கொண்ட மனிதரை தான் பார்த்ததே இல்லை எனவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

எழுத்தாளர் ஷோபா டே, பின்னணி பாடகர் ஷான் உள்ளிட்ட பலரும் ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்துக்கு கண்டனமும், எதிர்ப்பும்
தெரிவித்துள்ளனர். மறுபுறம், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரான மெக்பூபா முக்தி, பின்னணி பாடகி சின்மயி உள்ளிட்டோர் ரஹ்மானின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், தனது கருத்து குறித்து ஏ.ஆர்.ரஹ்மானே தற்போது வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். “சில நேரங்களில் நமது நோக்கங்கள் தவறாக புரிந்துகொள்ளப்படும் என்பதை புரிந்துகொள்கிறேன். ஆனால், இசையின் மூலம் கலாச்சாரங்களை உயர்த்துவதும், கொண்டாடுவதும்தான் எனது குறிக்கோள். மாறாக, எந்த சூழலிலும் பிறர் வருந்த வேண்டும் என நான் நினைக்க மாட்டேன்.” என ஏ.ஆர்.ரஹ்மான் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், இந்தியனாக இருப்பதில் பெருமையடைவதாகவும், ஏனெனில், கருத்து சுதந்திரத்திற்கு இந்தியாவில் எப்போதும் வாய்ப்பளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி முன்னிலையில் பல்வேறு இசைக்குழுக்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சி நடத்தியதையும், ராமாயண படத்திற்கு இசையமைத்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாதான் எனது உத்வேகம். இந்தியாதான் எனது ஆசிரியர். இந்தியாதான் எனது எனது வீடு என தெரிவித்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், ஜெய்ஜிந்த், ஜெய் ஹோ எனக்கூறி அந்த வீடியோவை நிறைவு செய்துள்ளார்.

Tags: A.R. RahmanA.R. Rahman comments on religionreligious discrimination in Bollywood.BBC Asian Network.arr initerviewChhatrapati Sambhaji MaharajKANGANA RANAUT
Share
Tweet
SendShare
Previous Post

மெட்ரோ ரயிலில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனிப்பெட்டி கான இருக்கைகள் – ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

இந்தியா வந்த ஐக்கிய அரபு அமீரக அதிபருக்கு உற்சாக வரவேற்பு – விமான நிலையத்திற்கே சென்று நேரில் வரவேற்றார் பிரதமர் மோடி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies