மதுரையில் இருந்து பழனி நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து டயர் வெடித்து கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து பழனி நோக்கி அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. சமயநல்லூர் அருகே சென்றபோது டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், பயணிகள் 20க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அரசுப் பேருந்து தரமற்ற நிலையில் இயக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனிடையே, விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
















