தேர்தலுக்கு இன்னும் சில காலங்களே உள்ள நிலையில் முடிவுகள் காலதாமதம் ஆனதால் திமுகவில் இணைந்ததாக வைத்தியலிங்கம் பேட்டி…
அதிமுக சுதந்திரமாக இல்லை சர்வாதிகாரப் போக்க செயல்படுகிறது என குற்றச்சாட்டு…
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் அதன் வெற்றிக்கு ஏற்ப வியூகங்களை வகுத்து வருகிறது இந்த சூழலில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவான ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த மனோஜ் பாண்டியன் அதில் இருந்து விலகி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்…
இந்நிலையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவில் ஓ.பி.எஸ்.க்கு அடுத்த நிலையில் இருந்த வைத்திலிங்கம் இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சரமான மு க ஸ்டாலின் தலைமையில் தன்னை திமுகவில இணைத்துக் கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசியதாவது…
வைத்திலிங்கம் செய்தியாளர் சந்திப்பு…
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயல்படுவது சிறந்ததாக இல்லை…
இன்றைக்கு தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் அவர்களை தமிழ்நாட்டின் மக்கள் போற்றுகிறார்கள் புகழ்கிறார்கள் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய திட்டங்களை அறிமுகப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்…
அண்ணா திமுகவின் தாய் கழகமான திமுகவில் என்னை இணைத்துக் கொண்டு உள்ளேன்…
தேர்தல் சீக்கிரமாக வர உள்ளது முடிவுகள் சீக்கிரமாக எடுக்க வேண்டும் ஆனால் அதற்கு காலதாமதம் ஏற்பட்டதால் என்னை திமுகவில் இணைத்து கொண்டேன் திமுகவின் இணைவதற்கு எந்த டிமாண்ட் வைக்கவில்லை…
வருகிற 26 ஆம் தேதி தஞ்சையில் இணைப்பு விழா நடைபெற உள்ளது. அதிமுக சுதந்திரமாக செயல்படவில்லை சர்வாதிகாரமாக செயல்படுகிறது…
டிடிவி தரப்பில் தனிப்பட்ட முறையில் என்னை இணைவதற்கு அழைத்தார்கள் ஆனால் நான் செல்லவில்லை. அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன் அவர்களின் நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை…
















