திருப்பூர் வந்த கவிஞர் வைரமுத்துவிற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வழக்கறிஞர்கள் வரவேற்பு அளித்தபோது கூட்டத்தில் செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று காலை 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திடீரென சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார், இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பானது ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெண்மணியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து அவரிடம் நடத்தி விசாரணையில் அந்த பெண்மணி பெயர் ஜெயா என்பதும் அவர் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்பதும் தனது கோரிக்கைகளை எந்த அரசும் நிறைவேற்ற வில்லை என அடிக்கடி இது போன்று நிகழ்வுகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர். இந்த நிலையில் கொங்கு கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, கவிப்பேரரசு வைரமுத்து திருப்பூர் வந்தார், அவருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர் அப்பொழுது தர்ணாவில் ஈடுபட்ட அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணி திடீரென தான் காலில் அணிந்திருந்த செருப்பை கழட்டி வைரமுத்துவிற்கு வரவேற்பு அளித்த கூட்டத்தின் மீது வீசி உள்ளார் நல்வாய்ப்பாக செருப்பு வைரமுத்து மீது படாமல் தள்ளி விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது தொடர்ந்து வழக்கறிஞர்கள் வைரமுத்துவை பாதுகாப்பாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
















