வலியே இல்லாமல் மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதை சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் அரசியல் சாசன பிரிவு 354 உட்பிரிவு 5 ஐ ரத்து செய்யக்கோரி மூத்த வழக்கறிஞரான ரிஷி மல்கோத்திரா கடந்து 2017ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்
ஒருவருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது என்பது காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்லாமல் ஒருவர் மாண்புடன் உயிரிழப்பது என்பதையும் கேள்விக்கு உள்ளாக்குகிறது என்றும், அதிக வலி நிறைந்த தூக்கு தண்டனைக்கு மாற்றாக வேறு வழியில் மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில் மத்திய அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி ஆஜரானார்.
இந்தியாவில் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதை தொடர்ந்து அனுமதிக்க வேண்டுமா அல்லது வலியில்லாத மாற்று வழியை கொண்டு வர வேண்டுமா என்பது குறித்து தீவிரதமாக ஆய்வு செய்து வருவதாக கூறினார்
வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.
















