அஜித் பவார் மறைவு - குடியரசு தலைவர், மத்திய அமைச்சர் அமித் ஷா இரங்கல்!
Mar 15, 2026, 03:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அஜித் பவார் மறைவு – குடியரசு தலைவர், மத்திய அமைச்சர் அமித் ஷா இரங்கல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 28, 2026, 03:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவாரின் மறைவுக்கு குடியரசு தலைவர்  உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

எக்ஸ் பக்கத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விமான விபத்தில் மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்ததாக கூறியுள்ளார்.

அஜித் பவாரின் அகால மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு என குறிப்பிட்டுள்ள குடியரசு தலைவர், மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்காக கூட்டுறவுத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது என தெரிவித்துள்ளார்.

மேலும், விமான விபத்தில் உயிரிழந்த அனைவரது குடும்பத்தினருக்கும் இழப்பை தாங்கும் வலிமையை கடவுள் வழங்கட்டும் என திரௌபதி முர்மு குறிப்பிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சரும், என்டிஏ கூட்டணிக் கட்சித் தலைவருமான அஜித் பவார் விபத்தில் உயிரிழந்த செய்தி தன்னை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மகாராஷ்டிராவில் உள்ள அனைத்துப் பிரிவினரின் நலனுக்காக அஜித் பவார் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட விதத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது எனவும் கூறியுள்ளார். அஜித் பவாரின் மறைவு என்டிஏ குடும்பத்திற்கு மட்டுமின்றி தனக்கும் ஒரு தனிப்பட்ட இழப்பு என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள பதிவில், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவாரின் அகால மரண செய்தியைக் கேட்டு வேதனையடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் அஜித் பவார் என தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் மீதான கருணை மற்றும் பொதுச் சேவையில் கொண்டிருந்த அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக அவர் என்றும் நினைவுகூரப்படுவார் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள பதிவில், மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார்  துயர மரணத்தால் ஆழ்ந்த வருத்தமடைந்தாக தெரிவித்துள்ளர்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலான அவரது பணி மகாராஷ்டிராவின் நிர்வாகத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமைலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இன்று காலை விமான விபத்தில் மகாராஷ்டிர துணை முதலமைச்சர்  அஜித் பவார் அவர்களின் துயர மரணத்தால் நான் ஆழ்ந்த வருத்தமடைந்ததாக தெரிவித்தார்.

பாராமதி தொகுதியிலிருந்து எட்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், ஒரு அனுபவமிக்க நிர்வாகி மற்றும் ஒரு முக்கியத் தலைவர் எனறும்,  அவர் தனது வாழ்வின் பல தசாப்தங்களை பொது சேவைக்கும் மகாராஷ்டிராவின் நலனுக்கும் அர்ப்பணித்தவர். அவரது திடீர் மறைவு மாநிலத்திற்கும் நாட்டிற்கும் ஒரு பேரிழப்பு எனறும் அண்ணாமலை கூறியுள்ளார்.

Tags: ajit pawar death hindi newsajit pawar death live updateajit pawar death live updatesajit pawar plane crash deathajit pawar deathajit pawar death newsajit pawar death plane crashajit pawar death news liveajit pawar death news today
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா – மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies