20 மாகாணங்களில் பாதிப்பு : பல பில்லியன் டாலர் இழப்பு : அமெரிக்காவின் பொருளாதாரத்தை பதம் பார்த்த பனிப்புயல்!
Mar 15, 2026, 07:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

20 மாகாணங்களில் பாதிப்பு : பல பில்லியன் டாலர் இழப்பு : அமெரிக்காவின் பொருளாதாரத்தை பதம் பார்த்த பனிப்புயல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 28, 2026, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனிப்புயல், அந்நாட்டின் பொருளாதாரத்தையும் பதம் பார்த்துள்ளது. பனிப்புயலின் தாக்கம் தொடரும் நிலையில், பல பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த ஒரு செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்….

அமெரிக்காவில் வீசிய கடுமையான பனிப்புயல், அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகளை உறைய வைக்கும் குளிரில் தள்ளியுள்ளது… கடந்த 1994ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவை தாக்கிய மிக மோசமான புயலாக பார்க்கப்படுவதால், இதன் தாக்கமும் அளவிடாத முடியாத அளவுக்கு உள்ளது…

இதன் காரணமாக ஆர்கன்சஸ் தொடங்கி ஓஹியோ, டெக்சாஸ், மாசசூசெட்ஸ், மிசிசிப்பி, டென்னசி, நியூ இங்கிலாந்து வரை 2 அடி உயரத்திற்கும் மேல் பனி படந்துள்ளது… இதனால் சாலை மற்றும் வான் போக்குவரத்து முடங்கியுள்ளது…

பனிப்புயல் 25 பேரின் உயிரை குடித்துள்ள நிலையில், மைனஸ் 31 டிகிரி செல்சியஸ் தட்பவெப்ப நிலையால் பொதுமக்கள் நடுநடுங்கிப் போயுள்ளனர்…

சாலைகள், குடியிருப்புகள், வாகனங்கள் என எல்லாமே பனிக்கட்டிகளாக மாறியுள்ளன… பனிப்பொழிவு, மழை போன்று பெய்து கொண்டே இருப்பதாலும், பல லட்சம் வீடுகளுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கடுங்குளிரை எதிர்கொள்ள முடியாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர்…

இதன் காரணமாக 20 மாகாணங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது… ஒரு பக்கம் ராட்சத இயந்திரங்கள் பனியை அகற்ற ஓய்வின்றி உழைத்து வந்தாலும், தொடர் பனிப்பொழிவு அப்பணியையும் முடக்கிப்போட்டுள்ளது…

உறைபனியும், பனிமழையும் கைகோர்த்து கோர தாண்டவம் ஆடி வரும் நிலையில், உயிரை உறைய வைக்கும் குளிரான இன்னும் பல நாட்கள் நீடிக்கவே வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது வானிலை ஆய்வு மையம்….

பனியின் தாக்கம் மக்களை மட்டும் துயரத்தில் தள்ளவில்லை, அமெரிக்காவின் பொருளாதாரத்தையும் பதம் பார்த்துள்ளது… இதுவரை பில்லியன் டாலர் மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர் பொருளாதார நிபுணர்கள்….

பனிப்புயலால் ஏற்பட்ட இழப்புகளை, சூறாவளி, வெள்ளம், தீ விபத்துக்களை கணக்கிடுவது போல் அவ்வளவு எளிதாக கணக்கிட்டு விட முடியாது. விமானம், ரயில், பேருந்து என அனைத்து போக்குவரத்து வசதிகளும் ஒரே நேரத்தில் பாதிப்பை எதிர்கொள்ளும்போதும், மின் கட்டமைப்புகள் தோல்வியடையும்போதும், பல்வேறு துறைகளின் விநியோக சங்கிலிகளிலும், வணிக நடவடிக்கைகளும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன…

இது ஆண்டுதோறும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5 சதவிகிதம் முதல் 2 சதவிகிதம் வரை குறைக்கக் கூடும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்…

பனிப்புயலால் 11 ஆயிரத்து 400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சுமார் 105 முதல் 115 பில்லியன் டாலருக்கு இடையில் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என ACCUWEATHER கணித்துள்ளது…

வர்த்தக இடையூறுகள், மின்வெட்டுகள், பல்வேறு துறைகள் முடக்கம் போன்றவற்றை குறிப்பிட்டு, ACCUWEATHER இழப்பை கணக்கிட்டுள்ளது… நிலைமை இன்னும் சீராகாத நிலையில், இந்த இழப்பானது மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது…

இதில் பொருளாதார நிபுணர்களிடையே முரண்பட்ட கருத்துகள் இருந்தாலும், இழப்பீடு என்பது அதிகாரப்பூர்வமாக கணக்கிட்டு அறிவிக்கப்படவில்லை…. எனினும் பனிப்புயலின் தாக்கம் மேலும் பல நாட்கள் நீடிக்கும் என்பதாலும், சீரமைப்பு மற்றும் மீட்பு பணிகள் இன்னும் நிறைவடைய வில்லை என்பதாலும் பாதிப்பும், இழப்பும் அதிகமாகக் கூடும் என்றே கருதப்படுகிறது.

Tags: MississippiTennesseesnowstormbillion dollars losssnowstorm devastated usfreezing temperaturesUnited StatesTexasMassachusettsUS economy
ShareTweetSendShare
Previous Post

தஞ்சையில் முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது – அண்ணாமலை கண்டனம்!

Next Post

அவசர நிலையில் இருப்பதற்கான எந்த அறிவிப்பும் அஜித் பவார் பயணம் செய்த விமானியிடம் இருந்து வரவில்லை – விமானத்துறை அமைச்சகம் விளக்கம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies