விமான விபத்தில் அஜித் பவார் மரணம் : பனிமூட்டத்தால் நிகழ்ந்ததா? தொழில்நுட்ப கோளாறா? - சிறப்பு தொகுப்பு!
Jan 30, 2026, 01:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விமான விபத்தில் அஜித் பவார் மரணம் : பனிமூட்டத்தால் நிகழ்ந்ததா? தொழில்நுட்ப கோளாறா? – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 29, 2026, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிர துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜீத் பவார் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த நிலையில், அவரது உடல், பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்த விபத்து நிகழ்ந்தது எப்படி? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

மகாராஷ்டிராவில் மாவட்ட ஊராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்க அஜித் பவார் திட்டமிட்டிருந்தார்.

தனது சொந்த தொகுதியான பாராமதியில் நான்கு தேர்தல் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதற்காக மும்பையிலிருந்து தனி விமானம் மூலம் பாராமதிக்கு அஜித் பவார் கிளம்பியுள்ளார்.

பாராமதியில் தனி விமானம் தரையிறங்கும் போது, விமான நிலைய ஓடுபாதையில் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. காலை 8:48 மணிக்கு நிகழ்ந்த இந்த எதிர்பாராத விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்ததைச் சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

விபத்துக்குள்ளான சிறிய ரக தனி விமானத்தில் அஜித் பவார் உடன் பயணம் செய்த அவரது தனி உதவியாளர், தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி மற்றும் தலைமை விமானி மற்றும் துணை விமானி உட்பட மொத்தம் 5 பேரும் இந்த விமான விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

பாராமதியில் விபத்துக்குள்ளான தனி விமானம் பாம்ப்பார்டியர் லியர்ஜெட் 45 விமானம் ஆகும். இது 2010ஆம் ஆண்டு முதல் சேவையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. வி.எஸ்.ஆர் வென்ச்சர்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த லியர்ஜெட் 45 விமானம் VT-SSK என பதிவு செய்யப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான விமானம் உட்பட இந்த நிறுவனம் மொத்தம் 17 லியர்ஜெட் 45 விமானங்களை இயக்கி வருகிறது.

டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள வி.எஸ்.ஆர் வென்ச்சர்ஸ் நிறுவனத்தை 2011ஆம் ஆண்டு விஜய் குமார் சிங் மற்றும் ரோஹித் சிங் ஆகியோரால் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது வணிகப் பயணங்கள் மற்றும் மருத்துவ அவசரப் போக்குவரத்துச் சேவைகளுக்காக சார்ட்டர் சேவைகளை வழங்கும் இந்நிறுவனத்தில் 60க்கும் மேற்பட்ட விமானிகள் பணியாற்றி வருகின்றனர்.

டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் போபால் ஆகிய நகரங்களிலிருந்து செயல்படும் இந்த நிறுவனம் ஒரு 24 மணி நேர விமான சேவை நிறுவனம் என்று விளம்பரப்படுத்தியுள்ளது.

லியர்ஜெட்-45 என்பது ஒரு நடுத்தர விமானமாகும். கனடாவைச் சேர்ந்த பம்பார்டியர் என்ற விமானத் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த லியர்ஜெட் விமானம், பெரும்பாலும் வாடகை விமான நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது. இது இரண்டு ஹனிவெல் டர்போஃபேன் என்ஜின்களால் இயக்கப்படும் விமானமாகும்.

ஒரே நேரத்தில் சுமார் 8 பேர் பயணிக்க கூடிய இந்த விமானத்தில் சுமார் 3 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை அதிக வேகத்தில் செல்ல முடியும் என்று கூறப்படுகிறது.

இலகுரக வணிக ஜெட் விமானமான இந்த விமானம், பொதுவாக கார்ப்பரேட் மற்றும் விஐபிகளின் பிரத்யேக பயணங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

விபத்துக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிய விமானத் தரவு மற்றும் காக்பிட் குரல் பதிவுக் கருவிகளை மீட்டுள்ள நிலையில், விமானக் குழுவினரின் தகவல் தொடர்பு, விமான அமைப்புகள் மற்றும் தரையிறங்கும் நேரத்தின் வானிலை தரவுகளையும் ஆய்வு செய்யப் பட்டு வருகின்றன.

முன்னதாக, ஏற்கெனவே 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே நிறுவனத்தின் VT-DBL என பதிவு செய்யப்பட்ட லியர்ஜெட் 45XR விமானம், விசாகப்பட்டினத்திலிருந்து வரும்போது மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. விரைவாக விமானத்தில் ஏற்பட்ட தீயை அணைத்ததால் அதிர்ஷ்டவசமாக விமானத்தில் பயணித்த 8 பேரும் சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்தனர்.

முதல்கட்ட விசாரணைகளில் விபத்து நடந்த நேரத்தில் புனே-பாராமதி பகுதிக்கு மேல் பார்வைத் திறன் மிகவும் குறைவாக இருந்ததாகவும், இது இன்ஸ்ட்ரூமென்ட் லேண்டிங் சிஸ்டம் (ILS) இல்லாத பாராமதி விமான நிலைய ஓடுபாதையில் விமானத்தைத் தரையிறங்குவதில் சிக்கலை ஏற்படுத்தி இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ILS இல்லாத நேரத்தில் விமானிகள் ஓடுபாதையில் விமானத்தைச் சரியாக தரையிறக்க கையேடு மற்றும் பார்வை நுட்பங்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

தனது முதல் முயற்சியில் நேரடியாக ஓடுபாதையை அணுக முடியாத நிலையில் ஒரு பெரிய வளைவை எடுத்த விமானம் தரையிறக்கத்தை முதல் முறை கை விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அடுத்து விமானத்தை இரண்டாவது முறை தரையிறக்க முயற்சி செய்த விமானி, ‘மேடே’ என்ற அவசர அழைப்பை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

பிறகு, சுமார் 100 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் சமநிலையை இழந்து,ஓடுபாதைக்கு முன்பாக தரையில் மோதி வெடித்தது என்றும், தொடர்ந்து சரவெடி போல் வெடித்து சிதறிய விமானம் தீப்பிடித்து எரிய தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல் போய்விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்தின் முதல் கட்ட பகுப்பாய்வு முடிந்ததும் ஒரு முறையான முதற்கட்ட அறிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: ajit pawar death news todayajit pawar death hindi newsajit pawar death live updateajit pawar death live updatesajit pawar plane crash deathajit pawar death after plane crashajit pawar deathajit pawar death newsajit pawar death plane crashajit pawar death news live
ShareTweetSendShare
Previous Post

மக்கள் மாளிகையில் கம்பர் சிலை – ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்!

Related News

மக்கள் மாளிகையில் கம்பர் சிலை – ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்!

உலகளாவிய மேலாதிக்க சக்திக்கு சரியான பதிலடி : இந்தியா.- EU ஒப்பந்தத்தை வரவேற்ற கனடா – சிறப்பு தொகுப்பு!

EU உடனான வர்த்தக ஒப்பந்தம் காரணமாக தொழில் வளர்ச்சி பன்மடங்கு உயரப்போகிறது – கோத்தாரி நிறுவன தலைவர் கணிப்பு!

மத்திய பட்ஜெட்டில் தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்பு என்ன? : “ரூஃப் டாப் சோலார் திட்டத்திற்கு மானியம் கிடைக்குமா? – சிறப்பு தொகுப்பு!

போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிப்போம் என்று முதல்வர் கூறுவதே இல்லை- நயினார் நாகேந்திரன்

வரும் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.8 முதல் 7.2 சதவீதம் வரை உயரும் – பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

விமான விபத்தில் அஜித் பவார் மரணம் : பனிமூட்டத்தால் நிகழ்ந்ததா? தொழில்நுட்ப கோளாறா? – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் நேரத்தில் போராடுவது ஃபேஷன் ஆகி விட்டதா? – அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்!

15 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா – பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்!

எஃப் 35 போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கினால்… கனடாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

சென்னை அரசு கல்லூரியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரம் : கேண்டீன் மாஸ்டரிடம் போலீஸ் விசாரணை!

பொருளாதார ஆய்வறிக்கை : மக்களவையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

வித்யா பிரதிஸ்டான் மைதானத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் :அஜித் பவாரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்!

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

இன்றைய தங்கம் விலை!

மதுரை விமான நிலைய செயல்பாடுகளை அதிகரிக்க நடவடிக்கை – ராம் மோகன் நாயுடு பதில்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies