கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே 900 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஓசூர் அருகே பெகிலி என்ற பகுதியில் மண்ணுக்குள் பாதி புதைந்துள்ள சிவன் கோயிலை அரசுப் பள்ளி ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான ஜெயலட்சுமி என்பவர் கண்டுபிடித்துள்ளார். இந்த கோயில் கிபி 11ம் நூற்றாண்டில் பிற்கால சோழர் காலத்தில் கட்டப்பட்டது என்று கண்டறியப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க கற்களால் கட்டப்பட்ட இக்கோயிலை, ஆலமரத்தின் வேர் முற்றிலுமாக மூடியிருந்தது. தற்போது வேர்களை அப்புறப்படுத்தி, பாதை அமைத்து கோயிலுக்குள் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கோயிலை புனரமைத்து பொதுமக்கள் வழிபட ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















