மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் பெண் துணை முதல்வராக அஜித் பவாரின் மனைவி சுநேத்ரா பதவியேற்றார்.
சமீபத்தில் நடந்த விமான விபத்தில் மகாராஷ்டிராவின் துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் மும்பையில் நடைபெற்றது.
அதில் அஜித்பவாரின் மனைவியும், ராஜ்யசபா எம்பியுமான சுநேத்ரா பவார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிசை சந்தித்த NCP தலைவர்கள், சுநேத்ராவை தேர்ந்தெடுத்ததற்கான கடிதத்தை வழங்கினர்.
பின்னர், மகாராஷ்டிராவின் மக்கள் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சுநேத்ரா துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவவிரத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்வில் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்று அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
















